செய்திகள் :

ஈரான் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேல் வான்வழித் தடம் மூடல்!

post image

இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி வருவதால் அந்நாட்டின் வான்வழிப் பாதை முழுவதுமாக மூடப்பட்டு அனைத்து வகையான பயணிகள் விமானங்களின் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஈரான் - இஸ்ரேல் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போர் நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூன் 24) காலை அறிவித்தார்.

இருப்பினும், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை ஈரான் ராணுவம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இதனால், அந்நாட்டின் வான்வழிப் பாதை அடுத்த அறிவிப்பு வரும் வரையில் முழுவதுமாக மூடப்படுவதாக இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டுக்கு இயக்கப்பட்ட அவசரகால சிறப்பு விமானங்கள் உள்பட அனைத்து பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திடீரென இந்த அறிவிப்பு வெளியான நிலையில், இஸ்ரேலுக்கு பயணம் செய்த சில விமானங்கள் மத்தியதரைக் கடலுக்கு மேல் வட்டமிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ஈரான் - இஸ்ரேல் இடையில் போர் துவங்கியது முதல், இருநாடுகளும் தங்களது வான்வழியை மூடியுள்ளன. ஆனால், அந்நாட்டிலுள்ள வெளிநாட்டினர் வெளியேற அவசரகால சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அமல்; தயவு செய்து மீறாதீர்கள்! - டிரம்ப் எச்சரிக்கை!

சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு!

சீன துணை அதிபர் ஹான் ஜெங் உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (ஜூன் 24) சந்தித்தார். சீன தலைநகர் பெய்ஜிங்கில் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்களுக்கான 20வது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், இ... மேலும் பார்க்க

இனி ஒரு குண்டுகூட பாயக்கூடாது! -இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் தமது தாக்குதல் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கறாராக எச்சரித்திருக்கிறார்.அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக தோழமை பாராட்டி வரும் யூத பூமியான இஸ்ரேலுக்... மேலும் பார்க்க

இருநாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளன: அதிபர் டிரம்ப்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றின் மீது கடந்... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா எனத் தெரியவில்லை: ரஷியா கருத்து

இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தம் நீடிக்குமா என்பது தெரியவில்லை என ரஷியா கருத்து தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் 12 நாள்களுக்குப் பிறகு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்... மேலும் பார்க்க

கிரீஸ் தீவில் 3வது நாளாகத் தொடர்ந்து எரியும் காட்டுத் தீ! போராடும் தீயணைப்புப் படை!

கிரீஸ் நாட்டின் சியோஸ் தீவில், 3-வது நாளாகத் தொடர்ந்து எரியும் காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டின் நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படை வீரர்கள் போராடி வருகின்றனர். கிழக்கு ஏகன் தீவான சியோஸிலுள்ள, வனப்பகுதி ம... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதலா? - ஈரான் மறுப்பு

போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் 12 நாள்களுக்குப் பிறகு முடிவுக்... மேலும் பார்க்க