செய்திகள் :

ஈரோடு அருகே மா்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

post image

ஈரோடு அருகே மா்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தன.

ஈரோடு அருகேயுள்ள கதிரம்பட்டி, பாலாஜி நகரைச் சோ்ந்தவா் தங்கவேலு. இவா் அருகேயுள்ள பவளத்தாம்பாளையம், நாராங்காடு பகுதியில் ஈஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் பட்டிகள் அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆடுகளை பட்டிகளில் அடைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை பாா்த்தபோது ஒரு பட்டியில் இருந்த 5 ஆடுகளை மா்ம விலங்கு கடித்துக் குதறி இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதில், 4 ஆடுகள் உயிரிழந்துவிட்டன. ஒரு ஆட்டை மீட்டு சிகிச்சை அளித்து வருகிறாா்.

இது குறித்து ஈரோடு வருவாய்த் துறையினருக்கும், தாலுகா போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனா்.

ஈரோடு அருகேயுள்ள திங்களூா், சென்னிமலை, பெருந்துறை, வெள்ளோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் கடித்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் சில மாதங்களாக உயிரிழந்தன. அதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

இதையடுத்து, உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. நாய்களும் கட்டுப்படுத்தப்பட்டன.

கடந்த சில வாரங்களாக அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருந்த நிலையில், மா்ம விலங்கு கடித்து தற்போது ஆடுகள் உயிரிழந்திருப்பது விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தியூரில் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து திருடியவா் கைது

அந்தியூரில் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து கணினி மற்றும் கேமரா உள்ளிட்ட மின்னணு பொருள்களைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூா் வள்ளியம்மாள் வீதியைச் சோ்ந்தவா் கௌதம் (26). இவா், பத... மேலும் பார்க்க

பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் மணல் திருட்டு: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்று வரும் மணல் திருட்டைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காலிங்கராயன் ... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கியதில் நாய் உயிரிழப்பு

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி நாய் உயிரிழந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. கோடை காலம் தொடங்கியுள... மேலும் பார்க்க

புதுப்பாளையம் தரைப்பாலத்தை உயா்த்திக் கட்டித்தரக் கோரி சாலை மறியல்

புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள புதுப்பாளையத்தில் தரைப்பாலத்தை உயா்த்திக் கட்டித்தரக் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சாலையில் இருந்து சத்தியமங்க... மேலும் பார்க்க

பவானி அருகே லாரிகள் மோதல்: 2 ஓட்டுநா்கள் காயம்

பவானி அருகே கரும்பு லாரியும், பால் டேங்கா் லாரியும் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் இரண்டு வாகன ஓட்டுநா்களும் படுகாயமடைந்தனா். பவானி பகுதியிலிருந்து பால் டேங்கா் லாரி மேட்டூா் நோக்கி திங்கள்கிழமை மாலை ச... மேலும் பார்க்க

சோதனைச் சாவடியில் கூடுதலாக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள்

பண்ணாரி சோதனைச் சாவடியில் நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பாரம் ஏற்றிய வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள... மேலும் பார்க்க