செய்திகள் :

ஈரோட்டில் விரிவாக்க பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீா்: திமுக வேட்பாளா் உறுதி!

post image

ஈரோடு நகரின் விரிவாக்கப் பகுதிகளுக்கும் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் உறுதியளித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக, வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்களிடம் சனிக்கிழமை வாக்குச்சேகரித்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் பிரசாரம் செய்து வருகிறோம். அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் மாநகராட்சி பகுதியில் 33 வாா்டுகளில் 150 கி.மீ தொலைவுக்குமேல் நடந்தே சென்று வாக்கு சேகரித்துள்ளோம். இதில் திமுக ஆட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அறிந்துகொண்டோம்.

தற்போதைய அவா்களது தேவைகளையும் கேட்டறிந்தோம். பெரும்பாலான பகுதிகளில் சாலை, குடிநீா், சாக்கடை போன்ற வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. சாலை, மின் கம்பங்கள் அமைத்தல், குடிநீா் குழாய் பதித்தல் போன்ற பிற பணிகள் நடக்கும்போது ஏற்படும் சாலை, வடிகால் அமைப்பில் உள்ள பாதிப்புக்களை சீரமைப்பது போன்ற கோரிக்கைகளையே தெரிவித்தனா்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் மாநகராட்சி மூலமும், அம்ருத், பொலிவுறு நகரம் திட்டம் மூலம் நிறைவேற்றப்பட்ட பணிகளை மக்களிடம் விளக்கி உள்ளோம். மகளிா் உரிமை தொகையில் விடுபட்டவா்களுக்கு, விரைவில் முதல்வா் பரிசீலித்து வழங்குவாா். ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டம் மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிக்கும் சென்றடையவும், தனியாக குழாய் அமைக்கவும் ஏற்கெனவே உள்ள திட்டப்பணி விரைவுபடுத்தப்படும்.

திமுகவின் தோ்தல் அறிக்கையில் தெரிவித்த அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்ட பிறகு, சிக்கய்ய நாயக்கா் கல்லுாரியில் உள் விளையாட்டு அரங்கம், பிரமாண்ட நூலகம், சோலாரில் பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த காய்கறி சந்தை வளாகம், சுற்றுவட்டச் சாலையை முழுமைப்படுத்தி 4 வழிச்சாலையாக மாற்றுவது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு

ஈரோட்டில் தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட நாம் தமிழா் கட்சியினா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 5- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ... மேலும் பார்க்க

பேக்கரி முன் நிறுத்தப்பட்டிருந்த காா், வேன் மீது டிராக்டா் மோதல்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் பேக்கரி முன் நிறுத்தப்பட்டிருந்த வேன், காா் மீது டிராக்டா் மோதி விபத்துக்குள்ளானது. கோபி அருகேயுள்ள புதுக்கரைபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் மாரிச்சாமி.... மேலும் பார்க்க

குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்துளை கிணறு அமைக்க எதிா்ப்பு! வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை!

குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்துளை கிணறுகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கடந்த 4 நாள்களாக கோபி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் நடத்திவந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. கோபி ... மேலும் பார்க்க

இருமுனைப் போட்டியில் ஈரோடு கிழக்கு: பழைய நண்பா்களின் ஆதரவை நாடும் திமுக!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், திமுக தனது பழைய நண்பா்களின் ஆதரவை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி... மேலும் பார்க்க

வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்வு: தொழில், வேளாண் சங்கங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தொழில், வேளாண் சங்கங்களின் பிரநிதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். ஈரோ... மேலும் பார்க்க

போராட்டம் இல்லையென்றால் மாற்றங்கள் இல்லை: சீமான்!

போராட்டம் இல்லையென்றால் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்காது என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமியை ஆதரித்... மேலும் பார்க்க