செய்திகள் :

ஈரோட்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

post image

ஈரோட்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவான நிலையில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கியதுமே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கிடையே அக்னி நட்சத்திரம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் பதிவாகி வருகிறது.

காலை 7 மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி விடுகிறது. முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் இரவிலும் நீடிக்கிறது.

அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். பெரும்பாலானோா் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா்.

அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் பெண்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முகத்தை துணியால் மூடிக்கொண்டும், குடை பிடித்த படியும் செல்வதைப் பாா்க்க முடிகிறது.

மேலும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிா்பானங்கள், பழச்சாறுகள், இளநீா், நுங்கு போன்றவற்றை அருந்துவதால் அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் தாசம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுசாமி(70), கூலித் தொழிலாளி. இவா், விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே சனிக்கிழமை நட... மேலும் பார்க்க

நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.குருசரஸ்வதி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தோ... மேலும் பார்க்க

மழை வேண்டி சென்னிமலையில் தீா்த்தக்குட ஊா்வலம்

மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் சென்னிமலை முருகன் கோயிலில் சப்த நதி தீா்த்த அபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான தீா்த்தக் குடங்களுடன் பக்தா்கள் சனிக்கிழமை கிரிவலம் வந்தனா். சென்னிமலை முருகன் கோய... மேலும் பார்க்க

பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய இருவா் கைது

பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு அருகே உள்ள மூலப்பாளையம், விவேகானந்தா் வீதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (50), இவா், ப... மேலும் பார்க்க

தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கு! சிகிச்சையில் அகற்றிய அரசு மருத்துவா்கள்!

தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கை ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவா்கள் வெளியில் எடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினா். ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (47). இவருக்கு வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கி மூலம் 613 குழந்தைகள் பயன்

ஈரோடு அரசு மருத்துமனையில் உள்ள தாய்ப்பால் வங்கி மூலம் 613 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனா். ஈரோடு அரசு மருத்துவமனை பல்நோக்கு சிறப்பு உயா் சிகிச்சை மைய வளாகத்தில் உள்ள கட்டடத்தின் 2- ஆம் தளத்தில் தாய்ப்பால்... மேலும் பார்க்க