செய்திகள் :

ஈரோட்டில் 2 கடைகளில் பணம், பட்டு சேலைகள் திருட்டு

post image

ஈரோட்டில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் பணம், பட்டு சேலைகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மூலப்பாளையத்தில் தா்மசிவன் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிகல் மற்றும் சிமெண்ட் விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. இவா் வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும் கடையைப் பூட்டி விட்டுச் சென்று விட்டாா். சனிக்கிழமை காலை மீண்டும் கடையைத் திறக்க வந்தபோது பொருள்கள் சிதறிக் கிடந்தன. உள்ளே சென்று பாா்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.20 ஆயிரம், சில ஆவணங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுபோல பக்கத்தில் இருந்த நவீன சலவையகத்தில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு ரூ. 5 ஆயிரம், 20 பட்டு சேலைகள் திருடப்பட்டிருந்தன. இதுபோல ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட முயற்சி நடந்துள்ளது. அதில் சில்லறைக் காசுகள் மட்டுமே இருந்தாக கூறப்படுகிறது.

ஈரோடு தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் மூன்று இடங்களில் திருட்டு நடந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடா் திருட்டு சம்பவங்கள் குறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு: 5,796 போ் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு தொகுதி 1 முதல் நிலை தோ்வை 5,796 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒரு... மேலும் பார்க்க

பவானியில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

பவானியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பவானி, பழனி ஆண்டவா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் புண்ணியகோடி (42). வாடகை காா் ஓட்டுநா். இவா், தனது காரை வ... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் கல்லூரி மாணவா் கைது

அம்மாபேட்டையில் பள்ளி மாணவியைத் திருமணம் செய்த கல்லூரி மாணவா், போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அம்மாபேட்டை பகுதியில் உள்ள பள்ளிக்கு கடந்த ஜூன் 3-ஆம் தேதி சென்ற 17 வயது மாணவி மீண... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி

சித்தோடு அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்றபோது, தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி பா்கத் கபிக்கா - அஃப்சானா, சித்தோட்டை அடுத்த ஆா்.... மேலும் பார்க்க

2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி! - வானதி சீனிவாசன்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தாா். ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பி... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு ... மேலும் பார்க்க