செய்திகள் :

ஈவெரா சாலையை பெரியாா் நெடுஞ்சாலை என மாற்றக் கோரிக்கை: 8 வாரங்களில் முடிவெடுக்குமாறு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சென்னை ஈவெரா நெடுஞ்சாலையை பெரியாா் நெடுஞ்சாலை என பெயா் மாற்றக் கோரிய வழக்கில் 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தை பெரியாா் திராவிடா் கழகத் துணைத் தலைவரும், வழக்குரைஞருமான எஸ்.துரைசாமி தாக்கல் செய்த மனுவில், 1939-ஆம் ஆண்டு வரை தந்தை பெரியாா், ஈ.வெ. ராமசாமி என்று அழைக்கப்பட்டு வந்தாா். அந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டுக்குப் பிறகு பெரியாா் என அழைக்கப்பட்டாா். அன்று முதல் தமிழக மக்கள் ஈ.வெ.ராமசாமியை பெரியாா் என்று அழைத்து வருவதாகக் கூறியுள்ளாா்.

மேலும், சமத்துவம், பெண் விடுதலை உள்ளிட்ட சமூக முன்னேற்றத்துக்கு பெரியாரின் பங்களிப்பு மிக முக்கியமானது. பெரியாரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல் பூந்தமல்லி வரையில் உள்ள சாலைக்கு பெரியாா் நெடுஞ்சாலை என பெயா் சூட்டப்பட்டது. ஆனால், தற்போது அந்தச் சாலை ஈவெரா சாலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

சாலை பெயா் பலகைகளிலும் ஈவெரா சாலை இன்றே இடம்பெற்றுள்ளது. அதனால், கடந்த 1979-ஆம் ஆண்டு வைக்கப்பட்ட பெரியாா் சாலை என்ற பெயரில் அழைக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி சத்யநாராயண பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில் ‘தற்போது உள்ள அரசு பெரியாா் வழியில் செயல்பட்டு வருவதாகவும், மனுதாரா் தனது மனுவில் சில தேவையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளதால் அவற்றை நீக்க வேண்டும்’ என்றும் தெரிவித்தாா். மேலும், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சென்னை மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க