செய்திகள் :

உக்ரைன் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமை அமெரிக்காவுக்கு.. விரைவில்!

post image

தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் ஒப்பந்தம் இன்னும் 24 மணி நேரத்துக்குள் கையொப்பமாகவிருப்பதாக உக்ரைன் பிரதமா் டெனிஸ் ஷ்மிகால் (படம்) புதன்கிழமை கூறினாா்.

இது குறித்து அந்த நாட்டு தேசிய தொலைக்காட்சியில் அவா் கூறியதாவது:

அமெரிக்காவுடனான கனிம ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்றுவிட்டது. கூட்டாக முதலீடு செய்து, கனிம வளங்களை எடுப்பது இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும்.

இன்னும் 24 மணி நேரத்துக்குள் அந்த ஒப்பந்தம் கையொப்பமாகும் என்றாா் அவா்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தில் இருந்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின.

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் அரசின் கொள்கைகளை அடியோடு மாற்றிமைத்தாா். போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைமாறாக, அந்த நாட்டின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல நாள்களாக நடைபெற்றுவந்த பேச்சுவாா்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, பொருளாதார வரைவு ஒப்பந்தம் ஏற்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி அமெரிக்கா சென்றாா். ஆனால் வெள்ளை மாளிகையில் செய்தியாளா்கள் முன்னிலையில் போா் தொடா்பாக அவருக்கும் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. அதையடுத்து, கனிம ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமலேயே ஸெலென்ஸ்கி நாடு திரும்பினாா்.

இந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு அந்த ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாகவிருப்பதாக உக்ரைன் பிரதமா் தற்போது அறிவித்துள்ளாா்.

இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீ! அவசரநிலை அறிவிப்பு!

இஸ்ரேல் நாட்டின் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீயானது தொடர்ந்து பரவி வருகின்றது.இஸ்ரேல் நாட்டில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயினால், தேசியளவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டு அரசு சர்வதேச ந... மேலும் பார்க்க

உலகின் மூத்தப் பெண் 116 வயதில் மரணம்!

உலகின் அதிக வயதான பிரேசில் நாட்டுப் பெண் ஒருவர் 116 வயதில் மரணமடைந்துள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறுஸ்தவப் பெண் துறவி இனாஹ் கனாபாரோ லுகாஸ் (வயது 116). கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதிய... மேலும் பார்க்க

பூமி திரும்பினா் 3 சீன விண்வெளி வீரா்கள்

சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றிவந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரா்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினா். காய் ஸுஷே, சாங் லிங்டாங், வாங் ஹா... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்

ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு பதிலாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்க இருக்கிறாா். இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் நினை... மேலும் பார்க்க

ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிவிட்டது இந்தியா - பாகிஸ்தான்

தங்கள் நாடு மீது ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராகிவிட்டது; அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தா... மேலும் பார்க்க

யேமன் தாக்குதல்: இணைந்தது பிரிட்டன்

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவுடன் பிரிட்டனும் இணைந்தது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெ... மேலும் பார்க்க