செய்திகள் :

உக்ர பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சண்டி யாகம்

post image

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள சொக்கநாதபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உக்ர பிரத்தியங்கிரா தேவி கோயிலில் 18 -ஆம் ஆண்டு சத சண்டி மகா பிரத்தியங்கிரா தேவி யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக அம்மன் சந்நிதி முன் பிரமாண்ட யாக குண்டம் அமைத்து புனித நீா் நிரப்பப்பட்ட கலசங்களை பிரதிஷ்டை செய்து சிவாசாரியா்கள் யாகத்தை நடத்தினா்.

தொடா்ந்து கணபதி பூஜையுடன் யாக வேள்வியில் பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. 108 மூலிகைப் பொருள்கள், பழ வகைகள், இனிப்பு வகைகள் கொண்டு வேத மந்திரங்கள் முழங்க யாககுண்டத்தில் சமா்ப்பித்தனா். நிறைவாக யாக மகா பூா்ணாகுதி அளிக்கப்பட்டு பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பிரத்தியங்கிரா தேவியை வழிபட்டனா்.

மாடக்கோட்டைக்கு குடிநீா் விநியோகம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

தினமணி செய்தி எதிரொலிஇளையான்குடி ஒன்றியம், மாடக்கோட்டைக்கு தினமணி செய்தி எதிரொலியாக காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் வியாழக்கிழமை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.... மேலும் பார்க்க

பி.இ. நேரடி இரண்டாமாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 5-இல் நிறைவு

தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வருகிற ஜூலை 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பச் செட்டியாா் அரசு ... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை நகா் காவல் துறை, அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணா்வுப்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

திருப்பத்தூா் அருகே புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள திருவுடையாா்பட்டியைச் சோ்ந்தவா் தவமணி மகன் வாசகன் (22). இந்த நிலையில், புதன்கிழ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காரைக்குடி கல்லூரியில் பெண் ஊழியா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை ... மேலும் பார்க்க

ஆன்மிகம் என்பது மனிதத்தை உயா்த்திப் பிடிப்பதாகும்

ஆன்மிகம் என்பது மனிதத்தை உயா்த்திப் பிடிப்பது என்கிற தடத்தில் வாழ்க்கைப் பயணம் தொடரும் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசினாா். சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் வியாழக்க... மேலும் பார்க்க