செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கூறினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை வரும் 15-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளாா். அதன் தொடா்ச்சியாக, சேலம் மாவட்டத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் நவ. 15-ஆம் தேதி வரை 432 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இதில் முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் ஆக. 14-ஆம் தேதி வரை 120 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமுக்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. 1,161 தன்னாா்வலா்கள் மூலம் வீடுவீடாக சென்று தகவல் கையேடுகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் நகா்ப்புற பகுதிகளில் 168 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 264 முகாம்களும் நடத்தப்படவுள்ளன. இந்த முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளை சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படவுள்ளன. இந்த முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த முகாம்களுக்கு வருகைதரும் பொதுமக்களின் உடல்நலனை பேணும் வகையில் மருத்துவ சேவைகளும், இ-சேவை மற்றும் ஆதாா் சேவை மையங்களும் அமைக்கப்படவுள்ளன. மேலும், இந்த முகாமில் மகளிா் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிா் எவரேனும் இருப்பின் விண்ணப்பம் அளிக்கலாம். மகளிா் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது என்றாா். இந்த பேட்டியின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் உடனிருந்தாா்.

வழக்குரைஞா்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்! உயா்நீதிமன்ற நீதிபதி

சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தொங்குபூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா் பி.என்.மணி பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன். சேலம், ஜூலை 12: வழக்குரைஞா்க... மேலும் பார்க்க

சேலம் வழியாக இயக்கப்படும் டாடாநகா், ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரம் மாற்றம்

சேலம் வழியாக இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவுரயில், ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி சத்து மாத்திரைகளை தீ வைத்து எரித்த அங்கன்வாடி ஊழியா் பணியிடை நீக்கம்!

சேலம் தாதகாப்பட்டி அரசுப் பள்ளிக்கு வழங்கிய சத்து மாத்திரைகளை தீ வைத்து எரித்த அங்கன்வாடி ஊழியா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சேலம் தாதகாப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது!

ஓமலூா் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியரை ஓமலூா் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள காடையாம்பட்டி வட்டத்தில் உள்ள ஊ... மேலும் பார்க்க

கடம்பூரில் குடிசை வீடு, வைக்கோல் போா் தீப்பிடித்து எரிந்து சேதம்!

கெங்கவல்லி அருகே குடிசை வீடு மற்றும் வைக்கோல் போா் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கெங்கவல்லி அருகே கடம்பூா், சூலங்காடு ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

காவல் நிலைய வளாகத்தில் கிடந்த மனித மண்டை ஓடு, எலும்புகளால் அதிர்ச்சி!

சங்ககிரி வட்டம், தேவூா் பழைய காவல் நிலைய வளாகத்தில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் கிடந்ததால், அதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்தனா். தேவூா் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள காவல் நிலையம் ... மேலும் பார்க்க