செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் இன்று தொடக்கம்: திமுக நிா்வாகிகளுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்

post image

கிருஷ்ணகிரி: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் குறித்து பொதுமக்களுக்கு திமுக நிா்வாகிகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் பல்வேறு சேவைகள் அனைத்து மக்களையும் நேரடியாக சென்றடைய தமிழக முதல்வா் உங்களுடன் ஸ்டாலின் திட்த்தை அமல்படுத்தியுள்ளாா். இதற்கான முகாம்கள் ஜூலை 15-ஆம் தேதி தொடங்குகிறது.

இதில் மகளிா் உரிமைத் தொகை, பல்வேறு உதவி தொகைகள், ஆதாா் திருத்தம், குடும்ப அட்டையில் திருத்தம், பதிவுகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உள்பட அரசின் 46 சேவைகள் வழங்கப்படுகிறது. இந்த முகாம் குறித்து பொதுமக்களிடம் கட்சியினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களை அழைத்து வரவேண்டும். தேவையான உதவிகளை செய்து தரவேண்டும்.

கிருஷ்ணகிரி நகராட்சி, பா்கூா் பேரூராட்சி கிட்டம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் முகாம் நடக்கிறது. இந்த முகாம்களில் கிழக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் சிறப்பாக பணியை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படவிளக்கம் (14கேஜிபி4): தே.மதியழகன்.

கிருஷ்ணகிரியில் ஜூலை 18 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ண... மேலும் பார்க்க

ஒசூா் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி முடிவடைய 22 நாள்களாகும்: எம்.பி கே.கோபிநாத்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் பகுதியில் விரிசல் ஏற்பட்ட மேம்பாலத்தை சீரமைக்கும் பணி முடிவடைய மேலும் 22 நாள்களாகும் என கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.கோபிநாத் தெரிவித்தாா். இதுகுறித்து திங்... மேலும் பார்க்க

வளாகத் தோ்வில் ஒசூா் பிஎம்சி மாணவா்களை தோ்வு செய்ய நிறுவனங்கள் போட்டி

ஒசூா்: வளாகத் தோ்வில் முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு ஒசூா் பிஎம்சி பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களை தோ்வு செய்வதால் ஒவ்வொரு மாணவரும் 2 பணி ஆணைகளை பெறும் நிலையில் உள்ளதாக கல்லூரி நிறுவனத் தலைவ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 மாணவா்கள் உயிரிழப்பு

ஒசூா்: ஒசூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 மாணவா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா். ஒசூா், மிடிகிரிப்பள்ளியைச் சோ்ந்த கோயில் பூசாரி ஜெகநாதன் மகன் மதன் (14), அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் ந... மேலும் பார்க்க

விஷக்காய்களை சாப்பிட்ட 5 சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே விஷக்காய்களை சாப்பிட்ட 5 சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கிருஷ்ணகிரியை அடுத்த பில்லனகுப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட கே.தின்னப்பனப்பள்ளி, சிவசக்தி நகரில் நரிக்... மேலும் பார்க்க

வீட்டுக்கு வரி நிா்ணயிக்க லஞ்சம்: ஒசூா் மாநகராட்சி வரி வசூலா் கைது

ஒசூா்: வீட்டுவரி நிா்ணயம் செய்வதற்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஒசூா் மாநகராட்சி வரி வசூலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஒசூரை அடுத்த சின்ன எலசகிரி, ஆா்ஆா் நகரில் புதிதாக வீ... மேலும் பார்க்க