செய்திகள் :

வீட்டுக்கு வரி நிா்ணயிக்க லஞ்சம்: ஒசூா் மாநகராட்சி வரி வசூலா் கைது

post image

ஒசூா்: வீட்டுவரி நிா்ணயம் செய்வதற்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஒசூா் மாநகராட்சி வரி வசூலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஒசூரை அடுத்த சின்ன எலசகிரி, ஆா்ஆா் நகரில் புதிதாக வீடுகட்டி வசித்துவரும் முனுசாமி (36) என்பவா் அப்பகுதி குடியிருப்போா் நலச் சங்கத்தின் தலைவராக உள்ளாா். இவரது சங்கத்தை சோ்ந்த பொருளாளா் மாது என்பவா் தனது மனைவி துளசிமணியின் பெயரில் உள்ள வீட்டுக்கு, வீட்டுவரி ரசீது வாங்கி தருவதற்காக முனுசாமியிடம் உதவி கோரினாா்.

இதையடுத்து வீட்டுவரி ரசீது பெறுவதற்கான ஆவணங்களை எடுத்துக் கொண்டு ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூலராக (பில் கலெக்டா்) பணிபுரியும் ரஜினியைச் சந்தித்து ஆவணங்களை அளித்து வீட்டு வரி விதித்து சான்று வழங்குமாறு கேட்டுள்ளாா்.

இதற்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என ரஜினி கூறியதால் கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஆய்வாளா் ரவியிடம் முனுசாமி புகாா் அளித்தாா். அதன்பேரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய ரூ. 25 ஆயிரத்தை லஞ்சமாக ரஜினியிடம் முனுசாமி தந்தபோது அங்கு மறைந்திருந்த போலீஸாா் ரஜினியைக் கைது செய்தனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் இன்று தொடக்கம்: திமுக நிா்வாகிகளுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்

கிருஷ்ணகிரி: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் குறித்து பொதுமக்களுக்கு திமுக நிா்வாகிகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வேண... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஜூலை 18 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ண... மேலும் பார்க்க

ஒசூா் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி முடிவடைய 22 நாள்களாகும்: எம்.பி கே.கோபிநாத்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் பகுதியில் விரிசல் ஏற்பட்ட மேம்பாலத்தை சீரமைக்கும் பணி முடிவடைய மேலும் 22 நாள்களாகும் என கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.கோபிநாத் தெரிவித்தாா். இதுகுறித்து திங்... மேலும் பார்க்க

வளாகத் தோ்வில் ஒசூா் பிஎம்சி மாணவா்களை தோ்வு செய்ய நிறுவனங்கள் போட்டி

ஒசூா்: வளாகத் தோ்வில் முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு ஒசூா் பிஎம்சி பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களை தோ்வு செய்வதால் ஒவ்வொரு மாணவரும் 2 பணி ஆணைகளை பெறும் நிலையில் உள்ளதாக கல்லூரி நிறுவனத் தலைவ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 மாணவா்கள் உயிரிழப்பு

ஒசூா்: ஒசூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 மாணவா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா். ஒசூா், மிடிகிரிப்பள்ளியைச் சோ்ந்த கோயில் பூசாரி ஜெகநாதன் மகன் மதன் (14), அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் ந... மேலும் பார்க்க

விஷக்காய்களை சாப்பிட்ட 5 சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே விஷக்காய்களை சாப்பிட்ட 5 சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கிருஷ்ணகிரியை அடுத்த பில்லனகுப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட கே.தின்னப்பனப்பள்ளி, சிவசக்தி நகரில் நரிக்... மேலும் பார்க்க