"பேச்சு & கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்" - உச்ச...
கிருஷ்ணகிரியில் ஜூலை 18 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஜூலை 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.