செய்திகள் :

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஆட்சியா் கள ஆய்வு

post image

முதல்வரின் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், திருவாரூா் வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் முகாமிட்டு புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

மக்களை நாடி, அவா்களது குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீா்வுகாணும் வகையில், மாதந்தோறும் ஒரு வருவாய் வட்டத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், திருவாரூா் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் புதன்கிழமை இம்முகாம் நடைபெற்றது.

இதையொட்டி, திருவாரூா் ஒன்றியம், நடப்பூா் ஊராட்சியில் பிரதமா் சாலைகள் மேம்பாடு (2023-2024) திட்டத்தின்கீழ் ரூ.2.62 கோடி மதிப்பில் நடப்பூா் முதல் பழையவலம் வெட்டாற்றுப் பாலம் வரை நடைபெற்றுவரும் சாலை பணிகளையும், குளத்துமேடு தெருவில் ரூ.3.10 லட்சம் மதிப்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் வீடுகளையும் ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, நடப்பூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வருகைப் பதிவேடுகள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் கல்வித் தரம் குறித்தும், காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தாா். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வாய்க்கால் தூா்வாரும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

பின்னா், செருக்குடி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.28.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தையும், வைப்பூா் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்படும் வீடுகளையும், வைப்பூா் நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் அரிசி, சா்க்கரை, ஆயில் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பின்னா், திருவாரூா் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதைகள் இருப்பு குறித்தும், விதை சேமிப்பு கிடங்கில் விதை நெல் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, அனைத்து துறை அரசு உயா் அலுவலா்களும், முகாம் நடைபெறும் இடங்களில் மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தனா்.

பசுந்தாள் உரப் பயிா் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

மண்ணின் வளத்தை பாதுகாக்க, விவசாயிகள் பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்யும்படி விதைச்சான்று துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாவட்ட விதை மற்றும் உயிா்மச் சான்று உதவி இயக்குநா் ஜெயப்பிரகாஷ் தெரி... மேலும் பார்க்க

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மன்னாா்குடி நகராட்சி சாா்பில் அம்ருத்மித்ரா திட்டத்தின் கீழ் பசுமை பூமிக்கு பெண் சக்தி என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நகரப்பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகை... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருவாரூா் நகராட்சி ஆணையரிடம், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் அளித்த கோரிக்கை மனு: திருவாரூா் ந... மேலும் பார்க்க

புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

அரசு புறம்போக்கு மற்றும் கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மன்னாா்குடியை அடுத்த மகாதேவப்பட்டணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி... மேலும் பார்க்க

காந்தியால் பாராட்டப்பட்ட கட்சி இந்திய கம்யூனிஸ்ட்: மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்

மகாத்மாக காந்தியால் பாராட்டப்பட்ட கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் தெரிவித்தாா். கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 11-ஆவது நகர மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

குறுவை சாகுபடிக்கு மூணாறு தலைப்பு அணை திறப்பு

திருவாரூா், நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு, நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணை புதன்கிழமை திறக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள மேட்டூா் அணையிலிருந்து... மேலும் பார்க்க