செய்திகள் :

புதிய கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு சச்சின் டெண்டுல்கர் கொடுத்த முக்கிய அறிவுரை!

post image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நாளை (ஜூன் 20) லீட்ஸ் திடலில் தொடங்குகிறது.

இதையும் படிக்க: கேப்டனாக கலக்க காத்திருக்கும் ஷுப்மன் கில்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஆதரவு!

முடிவுகளுக்கு கவனம் கொடுங்கள்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், வெளியிலிருந்து வரும் கருத்துகள் குறித்து சிந்திக்காமல், ஷுப்மன் கில் அவரது முடிவுகளுக்கு கவனம் கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

sachin tendulkar
சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் சச்சின் டெண்டுல்கர் பேசியதாவது: ஷுப்மன் கில்லுக்கு நேரம் வழங்க வேண்டும் என நினைக்கிறேன். அவருக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும். ஷுப்மன் கில் இதனை செய்ய வேண்டும், அதனை செய்ய வேண்டும் என பல்வேறு கருத்துகள் வரப்போவதை என்னால் உணர முடிகிறது. இந்த விஷயங்கள் அனைத்தும் ஷுப்மன் கில்லின் கவனத்தை சிதறடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஷுப்மன் கில் வெளியில் இருந்து வரும் கருத்துகள் குறித்து சிந்திக்காமல், ஆட்டம் குறித்தும் அணியின் திட்டங்கள் குறித்தும் மட்டுமே சிந்திக்க வேண்டும். அணியின் நலனை கருத்தில் கொண்டு ஷுப்மன் கில் அவரது முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதையும் படிக்க: கேப்டன் பொறுப்பு ஷுப்மன் கில்லுக்கு எளிதாக இருக்கப் போவதில்லை: ரவி சாஸ்திரி

இந்தியா - இங்கிலாந்து இடையே நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து இரண்டு அணிகளுக்குமான 2025-27 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைக் காட்டிலும் பெரிது: ஷுப்மன் கில்

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்வதைக் காட்டிலும் பெரிது என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் க... மேலும் பார்க்க

இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஓய்வு இங்கிலாந்துக்கு சாதகமா? பென் ஸ்டோக்ஸ் பதில்!

இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களின் ஓய்வு இங்கிலாந்துக்கு சாதகமா என்பது குறித்து அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட... மேலும் பார்க்க

1 vs 11: இந்திய அணியை விட அதிகமான சதங்கள் அடித்துள்ள ஜோ ரூட்!

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தற்போதைய இந்திய அணியை விட அதிகமான சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். அந்தளவுக்கு இளம் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அண... மேலும் பார்க்க

கேப்டனாக கலக்க காத்திருக்கும் ஷுப்மன் கில்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஆதரவு!

டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷுப்மன் கில்லுக்கு இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் ஆதரவு தெரிவித்துள்ளார்.இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விள... மேலும் பார்க்க

கேப்டன் பொறுப்பு ஷுப்மன் கில்லுக்கு எளிதாக இருக்கப் போவதில்லை: ரவி சாஸ்திரி

கேப்டன் பொறுப்பு ஷுப்மன் கில்லுக்கு எளிதாக இருக்கப் போவதில்லை என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ... மேலும் பார்க்க

விளையாட்டை விட விராட் கோலி பெரியவரில்லை: அஸ்வின்

விராட் கோலி விளையாட்டை விட பெரியவரில்லை என இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்டுக்கு முன்பாக அஸ்வின் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது. விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிஜி... மேலும் பார்க்க