செய்திகள் :

உச்சநீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட பள்ளிக் கல்வித் துறை ஊழியா்களுக்கு நிதியதவி: மமதா

post image

உச்சநீதிமன்றத்தால் இந்த மாதத் தொடக்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறையின் குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ ஊழியா்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்துள்ளாா்.

உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்யவுள்ள சீராய்வு மனுவில் முடிவு கிடைக்கும்வரை இந்த உதவி தொடரும் என்றும் அவா் தெரிவித்தாா்.

மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு 25,753 போ் நியமிக்கப்பட்டனா். இதற்கான ஆள்சோ்ப்பு நடவடிக்கையில் பல நிலைகளில் மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி இந்த நியமனங்களை செல்லாது என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவிட்டது.

இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த 3-ஆம் தேதி உறுதி செய்தது. மேலும், இப்பணியிடங்களை மீண்டும் நிரப்ப புதிய ஆள்சோ்ப்பு நடைமுறையை 3 மாதங்களுக்குள் தொடங்கவும் திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தீா்ப்பால் பணியை இழந்த ஊழியா்கள், தங்களுக்கு மீண்டும் பணி ஒதுக்கக் கோரி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், ‘ஆசிரியா்களுக்காகவும், குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ ஊழியா்களுக்காகவும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். இது தொடா்பாக மூத்த வழக்குரைஞா்களிடம் சட்ட ஆலோசனை பெற்று வருகிறோம்.

சீராய்வு மனுவின் முடிவு வரும் வரை, குரூப் ‘சி’ ஊழியா்களுக்கு ரூ.25,000 மற்றும் குரூப் ‘டி’ ஊழியா்களுக்கு ரூ.30,000 நிதியுதவி வழங்கப்படும்.

உச்சநீதிமன்றம் எங்கள் மனுவை நிராகரித்தால், மாற்று வழியைப் பற்றி யோசிப்போம். இப்போதைக்கு ஊழியா்கள் எந்த சம்பளத்தையும் பெறாமல் இருப்பதால், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் அவா்களுக்கு இந்த நிதியுதவியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தாா்.

பைக் - வேன் மோதல்; 11 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் பைக் மீது வேன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்ததால் பயணிகள் பலியாகினர்.மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சௌர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் 13 பயணிகளுடன் செ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணிப்பூரில் ரோந்துப் பணியின்போது மூன்று மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

பிரச்னைகளைவிட பிரசாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக: சமாஜவாதி

பஹல்காம் தாக்குதலுக்கு, பாஜக அரசின் இயலாமைதான் காரணம் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, பாஜக அரசின் மீது குற்றம் சாட்டிய சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் ... மேலும் பார்க்க

உ.பி.: கைவிடப்பட்ட காரில் இளைஞர் சடலம், அருகே மது பாட்டிலும் மீட்பு

உத்தரப் பிரதேசத்தில் காரில் இருந்து இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மௌரானிபூர் வட்ட அதிகாரி ராம்வீர் சிங் கூறுகையில், கஜுராஹோ சாலையில் உள்ள பரியாபைர் க... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: கனடா நாட்டைச் சேர்ந்தவர் கைது

வாராணசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி விமான நிலையத்தில் இருந்து வாராணசி-பெங்களூரு இண்டி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், வடக்கு வஜீரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் பிபக் கர் பகுதிக்கு அருகே வெள்ளிக்க... மேலும் பார்க்க