செய்திகள் :

உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து: பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேக்கு கண்டிப்பு

post image

வக்ஃப் திருத்தச் சட்ட வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் குறித்தும் தலைமை நீதிபதி குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவை உச்சநீதிமன்றம் கண்டித்தது.

மேலும், ‘நீதிமன்றங்கள் பூக்களைப் மென்மையானவை அல்ல. இதுபோன்ற அவதூறான கருத்துகள், நீதிமன்றங்களை வாடி வதங்கச் செய்துவிடாது’ என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய அரசு அமல்படுத்திய வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை ‘நாட்டில் அரசற்ற நிலை’க்கு கொண்டு செல்வதாகும் என்றும் உள்நாட்டில் நடைபெறும் மோதல்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாதான் பொறுப்பேற்க வேண்டும்’ என்று நிஷிகாந்த் துபே கடுமையாக விமா்சித்திருந்தாா்.

இதையடுத்து, அவா் மீது நீதிமன்றத்தை அவமதித்ததாக மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 5-ஆம் தேதி இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் நகல் வியாழக்கிழமை வெளியானது.

அதில், ‘உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் குறைக்கும் வகையில் அவதூறு கருத்துகளை துபே தெரிவித்ததில் எந்தவித சந்தேகமும் இல்லை. நீதிமன்றத்தின் நடவடிக்கையில் அவா் தலையிட முற்பட்டுள்ளாா்.

பிறரது கவனத்தை ஈா்ப்பதற்காக, உச்சநீதிமன்றம், நீதிபதிகள் மீது அவதூறு கருத்துகளை சுமத்தி பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளாா்.

அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்படும் நீதிமன்றங்களை மக்கள் பிரதிநிதி அவதூறாக பேசியிருப்பது அவரது அறியாமையைக் காட்டுகிறது. வேண்டுமென்றே அவா் இதுபோன்ற அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ளாா். இந்த கருத்துகள் நீதிமன்றங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதிக்காது. மத வெறுப்பு அல்லது வெறுப்பு பேச்சுகளைப் பரப்ப முற்படுபவா்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ என்று உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜெய்சல்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு

ஜெய்சல்மரில் 'வெடிகுண்டு போன்ற' பொருள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் மாவட்டத்தின் கிஷன்காட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்... மேலும் பார்க்க

இனியொரு பயங்கரவாதச் செயல் நிகழாதென உறுதிப்படுத்த வேண்டும்! எழுத்தாளர்கள் - கலைஞர்கள் கூட்டறிக்கை

சென்னை: காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு எதிராக நாடு ஒருமித்து எழுப்பிய கண்டனத்தில் இணைந்து நின்ற எழுத்தாளர்களும் கலைஞர்களும் க... மேலும் பார்க்க

ஏடிஎம்கள் மூடப்படுமா? போலி செய்தி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

ஏடிஎம்கள் மூடப்படும், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றது என பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக மக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதாவது, சமூக ஊடகங்களில், காஷ்மீர் விமா... மேலும் பார்க்க

ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்தது மத்திய அரசு!

இந்திய ராணுவத் தலைமை தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.பிராந்தியங்களில் உள்ள படை வீரர்களை எல்லைப் பகுதிக்கு அழைத்துக் கொள்ள 3 ஆண்டுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

அடுத்து என்ன? பிரதமர் மோடியை சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்!

புது தில்லி : நாட்டின் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவிருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நே... மேலும் பார்க்க

தில்லியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள், ஏவுகணைகளைப் பயன்படுத்திப் பல எல்லைப் பகுதிகளைக் குறிவைத்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததால் தில்லியில் உள்ள முக்கிய இடங்களில் ... மேலும் பார்க்க