செய்திகள் :

உச்சநீதிமன்ற 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: மீண்டும் முழு பலம்

post image

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், ஏ.எஸ்.சந்தூா்கா் ஆகிய மூன்று நீதிபதிகளும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனா். இதன் மூலம் உச்சநீதிமன்றம் தனது முழு பலத்தை (34 நீதிபதிகள்) மீண்டும் எட்டியுள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா, நீதிபதிகளாக இருந்த அபய் எஸ்.ஓகா, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் ஓய்வுபெற்ால் 3 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டன. இந்த இடங்களுக்கு கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.அஞ்சாரியா, குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த விஜய் பிஷ்னோய், மும்பை உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏ.எஸ்.சந்தூா்கா் ஆகியோரை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், மேற்கண்ட மூவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனா்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் மூன்று நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பதவிப் பிரமாணம் செய்வித்தாா். உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 34. இப்போது மீண்டும் முழு பலத்தை உச்சநீதிமன்றம் எட்டியுள்ளது.

நீதிபதிகள் வாழ்க்கை குறிப்பு: குஜராத் மாநிலம் அகமதாபாதில் 1965-இல் பிறந்தவரான நீதிபதி அஞ்சாரியா, அங்குள்ள பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப் படிப்பை 1989-இல் முடித்து, மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினாா். 2011-இல் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவா், 2013-இல் நிரந்தர நீதிபதியானாா். 2024-இல் கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1964-இல் பிறந்த நீதிபதி பிஷ்னோய், மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி, கடந்த 2013-இல் அதே உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் 2015-இல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டாா். 2024-இல் குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றாா்.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த நீதிபதி சந்தூா்கா், நாகபுரியில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றி, 2013-இல் மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியானாா். பின்னா், அந்த உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா்.

நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள எம்.பிக்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான... மேலும் பார்க்க

மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் கடந்த வாரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த ந... மேலும் பார்க்க

பிகாரில் பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்துக்கு உள்ளான சிறுமி! உடனடி சிகிச்சை கிடைக்காமல் பலியான அவலம்!

பாட்னா: பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுமி சிகிச்சைக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பலியாகியுள்ளார்.பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்த நபரால், கத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கிய ராணுவ முகாம்: 3 வீரர்கள் பலி; பலர் மாயம்!

சிக்கிம் ராணுவ முகாம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீரர்கள் பலியாகினர். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூா், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு... மேலும் பார்க்க