செய்திகள் :

உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து: மக்களை சிரிக்க வைப்பதே குறிக்கோள்! யூடியூபர் விளக்கம்

post image

நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் இந்தியாஸ் காட் லேடண்ட் என்ற நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரன்வீர் அல்லபாடியா, 'பெற்றோர் உடலுறவு’ கொள்வது குறித்து அவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையானது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது.

கேலி என நினைத்து இந்திய கலாசாரத்தை அவமதிக்கும் விதத்திலும் மற்றவர்களைப் புண்படுத்தும் விதத்திலும் பேசியுள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே குடும்ப அமைப்புகளை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாக ரன்வீர், அபூர்வா உள்ளிட்ட யூடியூபர்கள் மீது உச்சநீதிமன்ற வழக்குரைஞர் புகார் அளித்துள்ளார். இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

இந்த நிலையில், சமய் ரெய்னா இன்று(பிப். 12) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “எனக்கு இப்போது ஏற்பட்டுள்ளவற்றை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. இந்தியாவின் காட் லேடண்ட் காணொலிகள் அனைத்தையும் எனது யூடியூப் சேனலிலிருந்து நீக்கிவிட்டேன்.

இவ்விவகாரத்தில் விசாரணை நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக விசாரணை முகமைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நன்றி” என்று பதிவிட்டு விளக்கமளித்துள்ளார்.

அதிநவீன அணுஉலைகள் உருவாக்கம்- இந்தியா-பிரான்ஸ் திட்டம்

ஆக்கபூா்வ அணுசக்தி ஒத்துழைப்பின்கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்... மேலும் பார்க்க

நீதிபதிகள் ஓய்வூதிய விவகாரம்: யுபிஎஸ் திட்டத்தால் தீா்வு கிடைக்க வாய்ப்பு- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நீதிபதிகள் ஓய்வூதியப் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) மூலம் தீா்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. மாவட்ட நீதிபதிகளின் ஊதியம், நி... மேலும் பார்க்க

தொழிலதிபருக்காக தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு- காங்கிரஸ் குற்றச்சாட்டு

கோடீஸ்வர தொழிலதிபா்கள் சிலருக்காக தேசப் பாதுகாப்பை மத்திய அரசு விட்டுக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் அதானி குழுமம் மரபுசாரா எரிச... மேலும் பார்க்க

பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு

பிரான்ஸின் மாா்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானும் புதன்கிழமை கூட்டாக திறந்துவைத்தனா். மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்க... மேலும் பார்க்க

தேசிய ஹோமியோபதி ஆணைய தலைவா் பதவி விலக உச்சநீதிமன்றம் உத்தரவு

தேசிய ஹோமியோபதி ஆணைய (என்சிஹெச்) தலைவா் பதவியில் இருந்து மருத்துவா் அனில் குரானா விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் என்சிஹெச் தலைவா் பதவிக்கு வி... மேலும் பார்க்க

வரி விதிப்பு, நாடு கடத்தல் விவகாரங்களை டிரம்ப்பிடம் பிரதமா் மோடி பேச வேண்டும்- காங்கிரஸ் தலைவா் காா்கே வலியுறுத்தல்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் வரி விதிப்பு அச்சுறுத்தல் மற்றும் இந்தியா்களை விலங்கிட்டு நாடு கடத்திய விவகாரத்தை பிரதமா் நரேந்திர மோடி எழுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன ... மேலும் பார்க்க