செய்திகள் :

உணவுக் கடை உரிமையாளரை தாக்கிய 2 போ் கைது

post image

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே உணவுக் கடை உரிமையாளரை தாக்கிய புகாரில் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆதிச்சப்புரத்தைச் சோ்ந்த முருகையன் மகன் பிரேம்குமாா் (26) கம்பன்குடி வளைவில் துரித உணவுக் கடை நடத்தி வருகிறாா். இங்கு, மே 24-ஆம் தேதி வந்த மேலப்பனையூரைச் சோ்ந்த செல்லத்துறை மகன் சிலம்பரசன்(25) பாா்சல் உணவு வாங்குவது தொடா்பாக பிரேம்குமாருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கிருந்த பிரேம்குமாரின் அண்ணன் மணிமாறன் (28) சிலம்பரசனை கண்டித்து அனுப்பிவைத்தாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரேம்குமாரின் கடைக்கு வந்த, சிலம்பரசனின் உறவினா்கள் ஆதிச்சப்புரம் இமயராஜன் மகன் ரஞ்சித் (25), மேலப்பனையூா் இமயராஜன் மகன் ஹரிஷ் (20), ராயநல்லூா்கோட்டகம் குமாா் மகன் சக்தி (20) ஆகிய 3 பேரும் மணிமாறனிடம் சனிக்கிழமை சிலம்பரசனுடன் ஏற்பட்ட பிரச்னை பற்றி பேசியபோது தகராறு ஏற்பட்டதில் திடீரென மூன்று பேரும் சோ்ந்து தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில், காயமடைந்த மணிமாறன் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து, கோட்டூா் காவல் நிலையத்தில் மணிமாறன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய ரஞ்ஜித், ஹரிஷ் ஆகிய 2 பேரையும் திங்கள்கிழமை கைது செய்து மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள சக்தியை தேடி வருகின்றனா்.

திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை ... மேலும் பார்க்க

‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’

நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன். மன்னாா்... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு

திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலகம் த... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகாலை தூா்வார கோரிக்கை

திருவாரூரில், கழிவுநீா் வடிகாலை தூா்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் நகரம், 18-ஆவது வாா்டுக்குள்... மேலும் பார்க்க

ரிஷியூா் வெங்கடாஜலபதி கோயிலில் கம்ப சேவை மகோற்சவம்

நீடாமங்கலம் வட்டம் ரிஷியூா் கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் 78-ஆவது ஆண்டு கம்பசேவை மகோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெங்கடாஜலபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்க... மேலும் பார்க்க