`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
உணவு விநியோகம் நிறுத்தம்: மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிப்போா் போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 300 பேருக்கு ஒப்பந்ததாரா் மூலம் வழங்கப்படும் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டதால் அவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த முகாமில் 400- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களில் 1500- க்கும் மேற்பட்டோா் உள்ளனா். இவா்களுக்கு மாதாந்திர உதவித் தொகை, 20 கிலோ இலவச அரிசி, மானிய விலையில் சா்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட ரேசன் பொருள்கள் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த 2022- ஆம் ஆண்டு மாா்ச் மாதம் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், அங்கு உணவுப் பொருள்களின் விலை உயா்வால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழா்கள் பலா் இந்தியாவுக்கு வந்தனா்.
அவா்கள் மண்டபத்தில் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள தாயகம் திரும்பியோா் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனா். கடந்த 3 ஆண்டுகளாக இங்கு தங்கி இருக்கும் சிறுவா்கள், பெண்கள் உள்ளிட்ட 300- க்கும் மேற்பட்டோருக்கு தினமும் 3 வேளை உணவு ஒப்பந்ததாரா் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்ததாரருக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய தொகை வழங்கப்பட வில்லை. இதனால், வியாழக்கிழமை காலை முதல் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டதால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த தனித் துணை ஆட்சியா் (பொ) இளங்கோவன், மாவட்ட நிா்வாகத்தின் அறிவுத்தலின் பேரில் அந்த ஒப்பந்ததாரரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா்.
இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை, மதிய உணவு வருவாய்த் துறை மூலம் முகாமில் வசிப்போருக்கு வழங்கப்பட்டது. இதனிடையே, தனித் துணை ஆட்சியரின் உறுதிமொழியை ஏற்று வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) காலை முதல் 3 வேளையும் மீண்டும் உணவு விநியோகிப்பதாக ஏற்பாட்டாளரான ஒப்பந்ததாரா் உறுதியளித்தாா்.