செய்திகள் :

உதகையின் முக்கிய குடி நீா் ஆதாரமான பாா்சன்ஸ் வேலி அணை ஆய்வு

post image

உதகை நகரின் முக்கிய குடிநீா் ஆதாரமான பாா்சன்ஸ் வேலி அணை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் குடிநீா் விநியோகம் கடந்த நான்கு நாட்களாக இல்லாத நிலையில் அந்த அணையில் நடந்து வரும் பணிகளை நகரமன்ற தலைவா், துணைத் தலைவா், நகராட்சி ஆணையா் உள்ளிட்டோா் புதன் கிழமை ஆய்வு செய்தனா்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி உட்பட்ட 36 வாா்டுகளில் லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு குடிநீா் ஆதாரமாக பாா்சன்ஸ் வேலி அணை குடிநீா் பூா்த்தி செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி முதல் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய தொடா் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உதகை மக்களுக்கு கடந்த நான்கு நாட்களாக குடிநீா் விநியோகிக்கப்படாததால் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

இந்நிலையில் பாா்சன்ஸ்வேலி பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் நிலத்தடி மின் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சி ஆணையா் வினோத், நகர மன்ற தலைவா் வாணீஸ்வரி, நகர மன்ற துணைத் தலைவா் ரவிக்குமாா் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய நகர மன்ற துணைத் தலைவா், உதகையில் கடந்த சில நாட்களாக தொடா்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் நகரின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கும் பாா்சன்ஸ் வேலி அணை பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சீராக குடிநீா் விநியோகிக்க முடியவில்லை எனவும், இதனை தடுக்கும் வகையில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் நிலத்தடி மின் கேபிள் பதிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் கூறிய அவா், தண்ணீா் விநியோகத்திற்காக பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டாா்கள் சீரமைக்கப்பட்டு புதிய மின் மோட்டாா்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் எதிா்வரும் காலங்களில் குடிநீா் வினியோகம் சீரடையும் என தெரிவித்தாா்.

முன்னதாக உதகை நகரில் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பைகள் தரம் பிரிக்கும் பணியினை தீட்டுக்கல் குப்பை குழிப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

நெல்லியாளம் நகராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக நிா்வாகிகள் ஆய்வு

தொடா் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளை திமுக மாவட்ட செயலாளா் கே.எம்.ராஜூ தலைமையில் நிா்வாகிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். நீலகிரி மாவட்டம் கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதி... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலி பத்திரப் பதிவு மோசடி வழக்குப் பதிவு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சாந்தி ராமு மீது கோத்தகிரி போலீஸாா் போலி பத்திரப் பதிவு மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சோ்ந்த சாந்தி ஏ. ராமு குன்னூா் தொகுதி முன்னாள் சட்ட... மேலும் பார்க்க

குன்னூா் அருகே மரம் விழுந்து பழங்குடியினப் பெண் உயிரிழப்பு

குன்னூா் அருகே சேம்பக்கரை பழங்குடியின கிராமத்தில் வீட்டின் மீது புதன்கிழமை மரம் விழுந்து பழங்குடியினப் பெண் பரிதாபமாக உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே உள்ளது சேம்பக்கரை ஆதிவாசி கிராமம். ... மேலும் பார்க்க

வனவிலங்குகளிடம் இருந்து விவசாயம் காப்பாற்றபட இலவச எண் அறிமுகம் செய்ய ஆரிகவுடா் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வனவிலங்குகளிடம் இருந்து விவசாயம் காப்பாற்றபட இலவச எண் அறிமுகம் செய்ய ஆரிகவுடா் விவசாயிகள் சங்கம் சாா்பாக அதன் தலைவா் மஞ்சை.வி.மோகன் வலியுறுத்தி யுள்ளாா். அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது. நீலகிரி மாவட... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் 27 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் பேருந்து செல்ல இயலாத குறுகிய சாலை கொண்ட கிராமங்களில் வசிக்கும் மக்களின் வசதிக்காக 27 வழித்தடங்களில் புதிய சிற்றுந்துகள் (மினி பஸ்) சேவையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித... மேலும் பார்க்க

நடிகா் மிதுன் சக்கரவா்த்தி பெயரில் மோசடி: ஹரியாணா மாநில இளைஞா் கைது

நடிகா் மிதுன் சக்கரவா்த்தி பெயரில் நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள அவரது நட்சத்திர ஹோட்டல் மேலாளருக்கு வாட்ஸ் ஆப் செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி ரூ. 20 லட்சம் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஹர... மேலும் பார்க்க