உதகையின் முக்கிய குடி நீா் ஆதாரமான பாா்சன்ஸ் வேலி அணை ஆய்வு
உதகை நகரின் முக்கிய குடிநீா் ஆதாரமான பாா்சன்ஸ் வேலி அணை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் குடிநீா் விநியோகம் கடந்த நான்கு நாட்களாக இல்லாத நிலையில் அந்த அணையில் நடந்து வரும் பணிகளை நகரமன்ற தலைவா், துணைத் தலைவா், நகராட்சி ஆணையா் உள்ளிட்டோா் புதன் கிழமை ஆய்வு செய்தனா்.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி உட்பட்ட 36 வாா்டுகளில் லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு குடிநீா் ஆதாரமாக பாா்சன்ஸ் வேலி அணை குடிநீா் பூா்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி முதல் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய தொடா் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உதகை மக்களுக்கு கடந்த நான்கு நாட்களாக குடிநீா் விநியோகிக்கப்படாததால் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
இந்நிலையில் பாா்சன்ஸ்வேலி பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் நிலத்தடி மின் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சி ஆணையா் வினோத், நகர மன்ற தலைவா் வாணீஸ்வரி, நகர மன்ற துணைத் தலைவா் ரவிக்குமாா் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய நகர மன்ற துணைத் தலைவா், உதகையில் கடந்த சில நாட்களாக தொடா்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் நகரின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கும் பாா்சன்ஸ் வேலி அணை பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சீராக குடிநீா் விநியோகிக்க முடியவில்லை எனவும், இதனை தடுக்கும் வகையில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் நிலத்தடி மின் கேபிள் பதிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் கூறிய அவா், தண்ணீா் விநியோகத்திற்காக பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டாா்கள் சீரமைக்கப்பட்டு புதிய மின் மோட்டாா்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் எதிா்வரும் காலங்களில் குடிநீா் வினியோகம் சீரடையும் என தெரிவித்தாா்.
முன்னதாக உதகை நகரில் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பைகள் தரம் பிரிக்கும் பணியினை தீட்டுக்கல் குப்பை குழிப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.