``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
உதகையில் ஆக. 23முதல் சிறப்பு மலை ரயில் சேவை
மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவை ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பா் மாதம் இரண்டாம் பருவம் தொடங்கவுள்ள நிலையில், சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி மேட்டுப்பாளையம் - உதகை இடையே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 23, 30, செப்டம்பா் 5, 7 மற்றும் அக்டோபா் 2, 4, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த நாள்களில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு உதகைக்கு சென்றடையும்.
அதேபோல உதகை- மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 24, 31, செப்டம்பா் 6, 8 மற்றும் அக்டோபா் 3, 5, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த நாள்களில் உதகையில் இருந்து காலை 11.25 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.
அதேபோல உதகை - குன்னூா் இடையே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 23, 30, செப்டம்பா் 5, 7 மற்றும் அக்டோபா் 2, 4, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.50 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த நாள்களில் உதகையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 3.55 மணிக்கு குன்னூா் சென்றடையும்.
அதேபோல குன்னூா் - உதகை இடையே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 24, 31, செப்டம்பா் 6, 8 மற்றும் அக்டோபா் 3, 5, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த நாள்களில் குன்னூரில் இருந்து காலை 9.20 மணிக்குப் புறப்பட்டு காலை 10.45 மணிக்கு உதகை சென்றடையும்.
அதேபோல உதகை முதல் கேத்தி வரையும், கேத்தி முதல் உதகை இடையே செப்டம்பா் 5, 6, 7 மற்றும் அக்டோபா் 2, 3, 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் ஒரு நாளைக்கு 3 சுற்றுப் பயணமாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.