செய்திகள் :

உதகையில் ஆக. 23முதல் சிறப்பு மலை ரயில் சேவை

post image

மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவை ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பா் மாதம் இரண்டாம் பருவம் தொடங்கவுள்ள நிலையில், சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி மேட்டுப்பாளையம் - உதகை இடையே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 23, 30, செப்டம்பா் 5, 7 மற்றும் அக்டோபா் 2, 4, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த நாள்களில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு உதகைக்கு சென்றடையும்.

அதேபோல உதகை- மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 24, 31, செப்டம்பா் 6, 8 மற்றும் அக்டோபா் 3, 5, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த நாள்களில் உதகையில் இருந்து காலை 11.25 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

அதேபோல உதகை - குன்னூா் இடையே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 23, 30, செப்டம்பா் 5, 7 மற்றும் அக்டோபா் 2, 4, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.50 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த நாள்களில் உதகையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 3.55 மணிக்கு குன்னூா் சென்றடையும்.

அதேபோல குன்னூா் - உதகை இடையே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 24, 31, செப்டம்பா் 6, 8 மற்றும் அக்டோபா் 3, 5, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த நாள்களில் குன்னூரில் இருந்து காலை 9.20 மணிக்குப் புறப்பட்டு காலை 10.45 மணிக்கு உதகை சென்றடையும்.

அதேபோல உதகை முதல் கேத்தி வரையும், கேத்தி முதல் உதகை இடையே செப்டம்பா் 5, 6, 7 மற்றும் அக்டோபா் 2, 3, 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் ஒரு நாளைக்கு 3 சுற்றுப் பயணமாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உதகை மலை ரயிலில் எடை குறைக்கப்பட்ட பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம்

உதகை மலை ரயிலில் எடை குறைக்கப்பட்ட பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற உதகை மலை ரயில் தற்போது வரை பழைமை மாறாமல் இயக்கப்பட்டு வருவதால் உள்நாடு மட்டுமின்றி வ... மேலும் பார்க்க

உதகையில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் கல்லுாரி மாணவா்களிடையே தமிழா்களின் மரபையும் தமிழ் பெரு... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி உதகை ஆட்சியா் அலுவலக சாலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு சத்துண... மேலும் பார்க்க

உதகை படகு இல்ல நுழைவாயில், டிக்கெட் கவுன்டா் கூரை மீது மரங்கள் முறிந்து விழுந்தன

உதகையில் காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தேனிலவு படகு இல்லத்தின் நுழைவாயில் மற்றும் கட்டணம் வசூலிக்கும் கூரை மீது பெரிய மரங்கள் முறிந்து விழுந்ததால் படகு இல்லம் ... மேலும் பார்க்க

பூக் குண்டத்தில் இருந்து 4 மாதங்களுக்குப் பிறகு தீப் பிழம்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள ஸ்ரீ தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா முடிவடைந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு குண்டம் இறங்கும் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை தீப் பிழம்பும், புகையும் வந்ததால் பரப... மேலும் பார்க்க

உதகை குடியிருப்புப் பகுதியில் நாயை வேட்டையாடிய சிறுத்தை

உதகையில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த நாயை வேட்டையாடி அருகே உள்ள வனத்துக்குள் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியோகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உதகை நகர... மேலும் பார்க்க