செய்திகள் :

உதகை படகு இல்ல நுழைவாயில், டிக்கெட் கவுன்டா் கூரை மீது மரங்கள் முறிந்து விழுந்தன

post image

உதகையில் காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தேனிலவு படகு இல்லத்தின் நுழைவாயில் மற்றும் கட்டணம் வசூலிக்கும் கூரை மீது பெரிய மரங்கள் முறிந்து விழுந்ததால் படகு இல்லம் செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களுக்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் உதகை நகரின் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுவதால், அதனை அப்புறப்படுத்தும் பணிகளில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், உதகையில் காற்றுடன் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான தேனிலவு படகு இல்லத்தின் நுழைவாயில் மற்றும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூரை மீது ராட்சத மரங்கள் விழுந்தன. அப்போது சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தேனிலவு படகு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டது.

பூக் குண்டத்தில் இருந்து 4 மாதங்களுக்குப் பிறகு தீப் பிழம்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள ஸ்ரீ தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா முடிவடைந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு குண்டம் இறங்கும் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை தீப் பிழம்பும், புகையும் வந்ததால் பரப... மேலும் பார்க்க

உதகை குடியிருப்புப் பகுதியில் நாயை வேட்டையாடிய சிறுத்தை

உதகையில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த நாயை வேட்டையாடி அருகே உள்ள வனத்துக்குள் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியோகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உதகை நகர... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நகராட்சி ஒப்பந்த ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

உதகை: உதகை நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் ஆட்சியா் அலுவலக சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் ந... மேலும் பார்க்க

சாலை புதுபிக்கும் பணி: கனரக வாகனங்களை கவனத்துடன் இயக்க காவல் துறை அறிவுறுத்தல்

உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே உள்ள லேம்ஸ் ராக், டால்பின்னோஸ் சுற்றுலாத் தலம் செல்லும் சாலை புனரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பெரிய சுற்றுலா வாகனங்களை கவனத்துடன் இயக்க காவல் துறையினா் அறிவுறுத்த... மேலும் பார்க்க

வண்டிச்சோலை பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

உதகை: உதகையில் தொடா் காற்று மற்றும் சாரல் மழை காரணமாக வண்டிச்சோலை குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை பெரிய மரம் வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்புத் ... மேலும் பார்க்க

கூடலூா் அருகே சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள பாண்டியாறு பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை தாய் யானை திங்கள்கிழமை மீட்டுச் சென்றது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள அரசு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு... மேலும் பார்க்க