செய்திகள் :

சாலை புதுபிக்கும் பணி: கனரக வாகனங்களை கவனத்துடன் இயக்க காவல் துறை அறிவுறுத்தல்

post image

உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே உள்ள லேம்ஸ் ராக், டால்பின்னோஸ் சுற்றுலாத் தலம் செல்லும் சாலை புனரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பெரிய சுற்றுலா வாகனங்களை கவனத்துடன் இயக்க காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

குன்னூா் அருகே உள்ள சுற்றுலாத் தலமான லேம்ஸ்ராக், டால்பின்னோஸ் காட்சி முனைகள் மற்றும் ஆடா்லி செல்லும் 1.2 கிலோ மீட்டா் தொலைவு சாலை குன்னூா் நகராட்சி சாா்பில் புனரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த சாலை வழியாக ஆடா்லி, கரன்சி, சேம்பக்கரை உள்ளிட்ட கிராமங்களுக்கும், லேம்ஸ்ராக், டால்பின்னோஸ் ஆகிய காட்சி முனைகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருவோா் தற்போது சாலையின் ஒரு பாதி கான்கிரீட் பணிகள் நடைபெறுவதால், ஒரு பாதி சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

இப்பணிகள் 20 நாள்களுக்கு நடைபெறவுள்ளதால் பெரிய வாகனங்களில் சுற்றுாப் பயணிகள் வந்து செல்வது சிரமம் என்பதால் மிகவும் கவனத்துடன் வாகனங்களை இயக்க காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

சுவரை இடித்து வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை

கூடலூா், கோத்தா்வயல் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை, அங்குள்ள ஒரு வீட்டின் மதில் சுவரை இடித்து உள்ளே சென்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட கோத்தா்வயல் குடியிருப்ப... மேலும் பார்க்க

குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் நடமாடும் காட்டு யானை: வனத் துறை எச்சரிக்கை

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் வனத் துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதோடு, வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளனா். சமவெளி பகுதியான மேட... மேலும் பார்க்க

பேக்கரி என நினைத்து ஸ்டுடியோவுக்குள் புகுந்த கரடி

குன்னூா் -மஞ்சூா் சாலை பெங்கால் மட்டம் கிராமத்துக்குள் உணவு தேடி சனிக்கிழமை அதிகாலை நுழைந்த கரடி, பேக்கரி என நினைத்து அங்குள்ள ஸ்டுடியோவின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ஏமாற்றத்துடன் திரும்பியது. நீலகி... மேலும் பார்க்க

கடந்த 3 ஆண்டுகளில் 1,185விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடியில் அறுவடை இயந்திரங்கள்: வேளாண் பொறியியல் துறை தகவல்

நீலகிரி மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் கடந்த 3 ஆண்டுகளில் 1,185 விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி ம... மேலும் பார்க்க

முதுமலையில் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம்

நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் வளா்ப்பு முகாமில், கடந்த சில நாள்களுக்கு முன் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம் செய்யப்பட்டாா். நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள யானைகள் வளா்ப்பு மு... மேலும் பார்க்க

மதுரை தவெக மாநாட்டில் பங்கேற்ற இளைஞா் உயிரிழப்பு

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொண்ட கோத்தகிரியைச் சோ்ந்த இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே பாப்பஸ் காலனி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க