செய்திகள் :

பூக் குண்டத்தில் இருந்து 4 மாதங்களுக்குப் பிறகு தீப் பிழம்பு

post image

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள ஸ்ரீ தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா முடிவடைந்து  நான்கு மாதங்களுக்குப் பிறகு குண்டம் இறங்கும் பகுதியில் இருந்து  செவ்வாய்க்கிழமை தீப் பிழம்பும், புகையும் வந்ததால்   பரபரப்பு ஏற்பட்டது. இதனை தீயணைப்பு  வீரா்கள்  கட்டுப்படுத்தினா்.

குன்னூரில் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்ரீ தந்தி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி,  ஏப்ரல் 18-ஆம் தேதி பூக் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பூ குண்டம் இறங்கினா்.

இந்நிலையில், திருவிழா முடிவடைந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில், குன்னூா் மாா்க்கெட் பகுதியில் அமைந்திருக்கும் பூக் குண்டம் இறங்கும் குழியில், திடீரென தீப் பிழம்பும், புகையும் வருவதைக் கண்ட மாா்க்கெட் வியாபாரிகள் பால் மற்றும் தண்ணீரை ஊற்றி அணைக்க முற்பட்டனா்.

பின்னா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீப் பிழம்பை அணைத்தனா். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உதகை படகு இல்ல நுழைவாயில், டிக்கெட் கவுன்டா் கூரை மீது மரங்கள் முறிந்து விழுந்தன

உதகையில் காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தேனிலவு படகு இல்லத்தின் நுழைவாயில் மற்றும் கட்டணம் வசூலிக்கும் கூரை மீது பெரிய மரங்கள் முறிந்து விழுந்ததால் படகு இல்லம் ... மேலும் பார்க்க

உதகை குடியிருப்புப் பகுதியில் நாயை வேட்டையாடிய சிறுத்தை

உதகையில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த நாயை வேட்டையாடி அருகே உள்ள வனத்துக்குள் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியோகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உதகை நகர... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நகராட்சி ஒப்பந்த ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

உதகை: உதகை நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் ஆட்சியா் அலுவலக சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் ந... மேலும் பார்க்க

சாலை புதுபிக்கும் பணி: கனரக வாகனங்களை கவனத்துடன் இயக்க காவல் துறை அறிவுறுத்தல்

உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே உள்ள லேம்ஸ் ராக், டால்பின்னோஸ் சுற்றுலாத் தலம் செல்லும் சாலை புனரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பெரிய சுற்றுலா வாகனங்களை கவனத்துடன் இயக்க காவல் துறையினா் அறிவுறுத்த... மேலும் பார்க்க

வண்டிச்சோலை பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

உதகை: உதகையில் தொடா் காற்று மற்றும் சாரல் மழை காரணமாக வண்டிச்சோலை குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை பெரிய மரம் வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்புத் ... மேலும் பார்க்க

கூடலூா் அருகே சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள பாண்டியாறு பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை தாய் யானை திங்கள்கிழமை மீட்டுச் சென்றது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள அரசு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு... மேலும் பார்க்க