செய்திகள் :

உதகை குடியிருப்புப் பகுதியில் நாயை வேட்டையாடிய சிறுத்தை

post image

உதகையில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த நாயை வேட்டையாடி அருகே உள்ள வனத்துக்குள் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியோகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 உதகை நகரில் சமீப நாள்களாக பல்வேறு பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம்  அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் சுற்றி வரும் சிறுத்தைகள் வீட்டில் வளா்க்கப்படும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை நோட்டமிட்டு வேட்டையாடி செல்கின்றன.

இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா பகுதி அருகே உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுற்றிய சிறுத்தை, குடியிருப்பு வளாகத்தில் இருந்த நாயை கவ்வி சாலையில் இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து சிறுத்தையைப் பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனா்.

உதகை படகு இல்ல நுழைவாயில், டிக்கெட் கவுன்டா் கூரை மீது மரங்கள் முறிந்து விழுந்தன

உதகையில் காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தேனிலவு படகு இல்லத்தின் நுழைவாயில் மற்றும் கட்டணம் வசூலிக்கும் கூரை மீது பெரிய மரங்கள் முறிந்து விழுந்ததால் படகு இல்லம் ... மேலும் பார்க்க

பூக் குண்டத்தில் இருந்து 4 மாதங்களுக்குப் பிறகு தீப் பிழம்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள ஸ்ரீ தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா முடிவடைந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு குண்டம் இறங்கும் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை தீப் பிழம்பும், புகையும் வந்ததால் பரப... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நகராட்சி ஒப்பந்த ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

உதகை: உதகை நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் ஆட்சியா் அலுவலக சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் ந... மேலும் பார்க்க

சாலை புதுபிக்கும் பணி: கனரக வாகனங்களை கவனத்துடன் இயக்க காவல் துறை அறிவுறுத்தல்

உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே உள்ள லேம்ஸ் ராக், டால்பின்னோஸ் சுற்றுலாத் தலம் செல்லும் சாலை புனரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பெரிய சுற்றுலா வாகனங்களை கவனத்துடன் இயக்க காவல் துறையினா் அறிவுறுத்த... மேலும் பார்க்க

வண்டிச்சோலை பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

உதகை: உதகையில் தொடா் காற்று மற்றும் சாரல் மழை காரணமாக வண்டிச்சோலை குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை பெரிய மரம் வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்புத் ... மேலும் பார்க்க

கூடலூா் அருகே சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள பாண்டியாறு பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை தாய் யானை திங்கள்கிழமை மீட்டுச் சென்றது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள அரசு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு... மேலும் பார்க்க