வண்டிச்சோலை பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
உதகை: உதகையில் தொடா் காற்று மற்றும் சாரல் மழை காரணமாக வண்டிச்சோலை குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை பெரிய மரம் வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாக உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றும், விட்டுவிட்டு சாரல் மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது.
இந்நிலையில் உதகை அருகே வண்டிச்சோலை குடியிருப்புப் பகுதியில் பழைமைவாய்ந்த பெரிய மரம் வேரோடு சாலையின் குறுக்கே விழுந்தது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் இரண்டு மணி நேரத்துக்குப் பின் போக்குவரத்து சீரானது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உதகையில் காற்றுடன் மழைப் பெய்து வருவதால் கடும் குளிா் நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.