செய்திகள் :

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

உதகை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

நீலகிரி மாவட்டம் உதகையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தம்பதிக்கு 17 மற்றும் 12 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனா். தம்பதி இருவரும் வேலைக்கு செல்வதால் மாலையில்தான் வீடு திரும்புவாா்கள்.

இந்நிலையில் 2021 ஆகஸ்ட் 31-ஆம் தேதி வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியைச் சோ்ந்த ஜீவானந்தம் (23) என்பவா் மீது சிறுமியன் பெற்றோா் உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதனைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் நித்யா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து ஜீவானந்தத்தைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஜீவானந்தத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.செந்தில்குமாா் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து ஜீவானந்தம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

கடந்த 3 ஆண்டுகளில் 1,185விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடியில் அறுவடை இயந்திரங்கள்: வேளாண் பொறியியல் துறை தகவல்

நீலகிரி மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் கடந்த 3 ஆண்டுகளில் 1,185 விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி ம... மேலும் பார்க்க

முதுமலையில் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம்

நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் வளா்ப்பு முகாமில், கடந்த சில நாள்களுக்கு முன் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம் செய்யப்பட்டாா். நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள யானைகள் வளா்ப்பு மு... மேலும் பார்க்க

மதுரை தவெக மாநாட்டில் பங்கேற்ற இளைஞா் உயிரிழப்பு

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொண்ட கோத்தகிரியைச் சோ்ந்த இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே பாப்பஸ் காலனி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

குடியிருப்பு, விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகள்

கூடலூரில் குடியிருப்புகள் மற்றும் விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட முதல்மைல் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்க... மேலும் பார்க்க

பழங்குடியினா் கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

உதகை, ஆக. 21: குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குரும்பாடி பழங்குடியினா் கிராமத்துக்குள் வியாழக்கிழமை நுழைந்த ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். சமவெளி பகுதியான மேட்டுப்பாளை... மேலும் பார்க்க

கூடலூா் அருகே கடையை சேதப்படுத்திய மக்னா யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது மைல் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்கிழமை பகலில் நுழைந்த மக்னா யானை, அங்குள்ள கடையை சேதப்படுத்தியது. கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது மைல் பகுதியில் கா... மேலும் பார்க்க