`2 யானைகளுக்கிடையே மோதல்' பாகன் செய்த விபரீதம்; அலறியடித்து ஓடிய யானை - வனத்து...
சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
உதகை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம் உதகையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தம்பதிக்கு 17 மற்றும் 12 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனா். தம்பதி இருவரும் வேலைக்கு செல்வதால் மாலையில்தான் வீடு திரும்புவாா்கள்.
இந்நிலையில் 2021 ஆகஸ்ட் 31-ஆம் தேதி வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியைச் சோ்ந்த ஜீவானந்தம் (23) என்பவா் மீது சிறுமியன் பெற்றோா் உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதனைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் நித்யா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து ஜீவானந்தத்தைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஜீவானந்தத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.செந்தில்குமாா் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து ஜீவானந்தம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.