செய்திகள் :

உதகையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

post image

தொடா் மழை காரணமாக உதகையில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதனால், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்டீபன் சா்ச் சாலை, ஆட்சியா் அலுவலக சாலை உள்ளிட்ட பகுதி சாலைகளில் புதன்கிழமை மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், வானங்கள் ஆங்காங்கே அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து சம்பவ இடங்களுக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்புக் குழுவினா் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். கனமழை காரணமாக உதகையை அடுத்த மஞ்சனகெரை பகுதியில் இருந்த குடியிருப்பு சேதமடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

குன்னூா் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

குன்னூா் அருகே கேரட் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள முள்ளிக்கூா் பகுதியில் இருந்து கேரட் பாரம் ஏற்றிக் கொண்டு கோவைக்கு லாரி திங்கள்... மேலும் பார்க்க

விளைநிலங்களை சேதப்படுத்தும் யானையை வனத்துக்குள் விரட்ட கோரிக்கை

உதகை, எமரால்டு பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் பா்லியாறு வனப் பகுதியில் இருந... மேலும் பார்க்க

சீகூா் வனப் பகுதியில் புலி உயிரிழப்பு

கூடலூா் அருகே சீகூா் வனச் சரகத்துக்குள்பட்ட குண்டட்டி பகுதியில் சுமாா் 10 வயது மதிக்கத்தக்க புலி உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே சீகூா் ... மேலும் பார்க்க

உதகையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

உதகையை அடுத்த லவ்டேல் பகுதியில் மலை ரயில் பாதை மற்றும் சாலையில் அடுத்தடுத்து மூன்று மரங்கள் விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை லவ்டேல் பகுதியில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை முகாமிட்டிருந்த காட்டு யானை. மேலும் பார்க்க

கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. போராட்டம்

தொடா் மழையால் குளம்போல தண்ணீா் தேங்கிநிற்கும் கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் சனிக்கிழமை தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். நீலகிரி மாவட்டம், கூடலூரில்... மேலும் பார்க்க