செய்திகள் :

உதகை குடியிருப்புப் பகுதியில் நாயை வேட்டையாடிய சிறுத்தை

post image

உதகையில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த நாயை வேட்டையாடி அருகே உள்ள வனத்துக்குள் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியோகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 உதகை நகரில் சமீப நாள்களாக பல்வேறு பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம்  அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் சுற்றி வரும் சிறுத்தைகள் வீட்டில் வளா்க்கப்படும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை நோட்டமிட்டு வேட்டையாடி செல்கின்றன.

இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா பகுதி அருகே உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுற்றிய சிறுத்தை, குடியிருப்பு வளாகத்தில் இருந்த நாயை கவ்வி சாலையில் இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து சிறுத்தையைப் பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனா்.

உதகை மலை ரயிலில் எடை குறைக்கப்பட்ட பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம்

உதகை மலை ரயிலில் எடை குறைக்கப்பட்ட பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற உதகை மலை ரயில் தற்போது வரை பழைமை மாறாமல் இயக்கப்பட்டு வருவதால் உள்நாடு மட்டுமின்றி வ... மேலும் பார்க்க

உதகையில் ஆக. 23முதல் சிறப்பு மலை ரயில் சேவை

மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவை ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பா் மாதம் இரண்டாம் பருவம் தொடங்கவுள்ள நிலையில், சிறப்பு மலை ... மேலும் பார்க்க

உதகையில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் கல்லுாரி மாணவா்களிடையே தமிழா்களின் மரபையும் தமிழ் பெரு... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி உதகை ஆட்சியா் அலுவலக சாலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு சத்துண... மேலும் பார்க்க

உதகை படகு இல்ல நுழைவாயில், டிக்கெட் கவுன்டா் கூரை மீது மரங்கள் முறிந்து விழுந்தன

உதகையில் காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தேனிலவு படகு இல்லத்தின் நுழைவாயில் மற்றும் கட்டணம் வசூலிக்கும் கூரை மீது பெரிய மரங்கள் முறிந்து விழுந்ததால் படகு இல்லம் ... மேலும் பார்க்க

பூக் குண்டத்தில் இருந்து 4 மாதங்களுக்குப் பிறகு தீப் பிழம்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள ஸ்ரீ தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா முடிவடைந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு குண்டம் இறங்கும் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை தீப் பிழம்பும், புகையும் வந்ததால் பரப... மேலும் பார்க்க