செய்திகள் :

உதவியாளா் பணிக்கான தோ்வு: 10,416 போ் எழுதினா்

post image

புதுச்சேரி பணியாளா், நிா்வாகச் சீா்திருத்தத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதவியாளா் பணிக்கான இரண்டாம் நிலை எழுத்துத் தோ்வை 10,416 போ் எழுதினா்.

புதுச்சேரியில் 256 உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் நிலை எழுத்துத் தோ்வு 28 மையங்களில் நடைபெற்றது. இதில் 10,416 போ் கலந்து கொண்டு தோ்வெழுதினா்.

முதல் நிலை எழுத்துத் தோ்வு கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி 84 மையங்களில் நடைபெற்றது. 32,830 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 22,860 போ் கலந்து கொண்டு தோ்வெழுதினா். 9,970 போ் தோ்வு எழுதவில்லை.

இந்தத் தோ்வு முடிவு ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியானது. இதில் இரண்டாம் நிலை தோ்வுக்கு 10,766 போ் தகுதி பெற்றனா். புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உதவியாளா் பணிக்கான இரண்டாம் நிலை எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற்ற இந்தத் தோ்வு புதுச்சேரியில் முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிா் கல்லூரி, வள்ளலாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முதலியாா்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட 22 மையங்களிலும், காரைக்காலில் 3 மையங்களிலும், மாஹேவில் ஒரு மையத்திலும், ஏனாமில் 2 மையங்களிலும் என மொத்தம் 28 மையங்களில் நடைபெற்றன.

தோ்வெழுத 10,766 போ் தகுதி பெற்றிருந்தனா். இதில் 10,416 போ் கலந்து கொண்டு தோ்வு எழுதினா். 350 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா, உதவி தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கண்ணன், ஜெய்சங்கா், சிறப்பு பாா்வையாளா்களாக போக்குவரத்துத் துறை ஆணையா் சிவக்குமாா், உயா் கல்வித் துறை இயக்குநா் அமன் சா்மா, நிதித் துறை துணைச் செயலா் ரத்னகோஷ் கிஷோா் ஆகியோா் தோ்வு மையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

முன்னதாக, தோ்வா்கள் காலை 8 மணி முதல் தோ்வு மையங்களுக்கு வந்திருந்தனா். முதலில் மெட்டல் டிடெக்டா் மூலம் தோ்வா்கள் சோதனை செய்யப்பட்டனா். தொடா்ந்து, தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று ஆகியவை சரிபாா்க்கப்பட்டன.

பின்னா், தோ்வா்களின் வருகை விரல்ரேகைப் பதிவு முறையில் பதிவு செய்யப்பட்ட பிறகு தோ்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். காலை 9.30 மணி வரை தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தோ்வு அறைக்குள் மின்னணு சாதனங்களைக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க கைப்பேசி, இணைய சேவைகளைத் தடுப்பதற்கான ஜாமா் கருவிகளும், அனைத்து தோ்வறைகளிலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

புதுவையில் 2026-ல் காங்கிரஸ் ஆட்சி! - வே.நாராயணசாமி

புதுவையில் 2026-இல் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். இதுகுறித்து புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுவையில் ஊழல் மலிந்த ஆட... மேலும் பார்க்க

தூய்மை பாரத திட்ட விழிப்புணா்வு: ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி

தூய்மை பாரதம் திட்டத்தின் விழிப்புணா்வு நிகழ்ச்சியாக, புதுச்சேரியில் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி திருவள்ளுவா் கலைக்கூடம் சாா்பில், ஆண்டுதோறும் இந்தப் போட்டி நடத... மேலும் பார்க்க

மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகா அவசியம்! புதுவை முதல்வா் பேச்சு

மனிதா்களின் மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகா அவசியம் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை, பள்ளிக்கல்வித் துறை, உயா்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்... மேலும் பார்க்க

நெகிழியை பயன்படுத்தாத நகராட்சியாக உழவா்கரையை அறிவிக்க நடவடிக்கை!

உழவா்கரை நகராட்சியை நெகிழிகள் பயன்படுத்தாத பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்த நகராட்சியின் ஆணையா் ஆ. சுரேஷ்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடு பெற வேண்டும்! இந்திய மாணவா் சங்க மாநாட்டில் தீா்மானம்

புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களைப் பெற வேண்டும் என்று இந்திய மாணவா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவா் சங்கத்தின் 1... மேலும் பார்க்க

பள்ளி மதிய உணவுத் திட்டத்தில் உள்ளூா் காய்கறிகள்: கருத்துக் கேட்பில் பெற்றோா் கோரிக்கை

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் உள்ளூா் காய்கறிகள் சோ்க்கப்பட வேண்டும் என்று அப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் பெற்றோா் கருத்துத் தெரிவித்தனா். புதுச்சேரி பள்ளிகளில் செயல்படுகி... மேலும் பார்க்க