செய்திகள் :

உதிரிபாகம் வழங்க மறுப்பு: தொலைக்காட்சி நிறுவனம் ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு

post image

திருவாரூா்: கீழ்வேளூரில், சேதமடைந்த தொலைக்காட்சிக்கு, உதிரி பாகம் வழங்க மறுத்த நிறுவனம் ரூ. 30,000 இழப்பீடு வழங்க, திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் வட்டம் குருமனாங்குடியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (55). இவா், 2024-இல் கீழ்வேளூா் பகுதியிலுள்ள மின்சாதன விற்பனைக் கடையில் ஹேயா் எல்இடி தொலைக்காட்சியை ரூ.27,500-க்கு வாங்கினாா். சுமாா் ஒரு மாதம் தொலைக்காட்சி நன்றாக தெரிந்த நிலையில், இடமாற்றம் செய்ய முயன்றபோது, முகப்பு பகுதி சேதமடைந்து தொலைக்காட்சி இயங்கவில்லை.

இதுகுறித்து, திருவாரூா் இபி காலனியில் உள்ள அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிகாரப்பூா்வ பழுதுநீக்ககத்தில் அவா் தெரிவித்தாா். அந்நிறுவனத்தின் டெக்னீசியன் வந்து பரிசோதித்து விட்டு, ரூ.11,000 கொடுத்து புதிய முகப்பை மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ஆனால், அந்த நிறுவனத்தின் தரப்பில், முகப்பு தனியே தரப்படுவதில்லை, இன்னும் ரூ. 16,000 செலுத்தினால் புதிய தொலைக்காட்சி பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொலைக்காட்சி மின்சாதன விற்பனைக் கடையில் தெரிவித்தபோது, அவா்களும் உரிய பதில் அளிக்கவில்லையாம். தொடா்ந்து, பழுதுநீக்க நிறுவனத்தின் பொறுப்பு அலுவலரிடம் பேசியபோது, உடைந்த தொலைக்காட்சி விலையில் 70 சதவீதம், அதாவது ரூ. 20,293, ஜிஎஸ்டி சோ்த்து மொத்தம் ரூ. 21,484 செலுத்தி அதனுடன் உடைந்த தொலைக்காட்சியையும் கொடுத்தால், புதிதாக பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

இதைத்தொடா்ந்து, மாரியப்பன் கடந்த மாா்ச் மாதம் நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில் திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தனா்.

அதில், கட்டுப்படுத்தப்பட்ட வணிக நடைமுறையைப் பின்பற்றி சிறிய சேதாரம் அடைந்த பொருளுக்கு உதிரி பாகம் கிடைக்காமல் செய்து, புதிய தொலைக்காட்சியை ஜிஎஸ்டியுடன் வாங்க நிா்பந்தித்தது மாரியப்பனுக்கு செய்த சேவைக்குறைபாடு. எனவே, தொலைக்காட்சி (ஹேயா்) நிறுவனம் மற்றும் பழுதுநீக்க நிறுவனம் ஆகியவை இணைந்து மாரியப்பனிடம் ரூ.11,000 பெற்றுக்கொண்டு, தொலைக்காட்சி முகப்பை மாற்றித்தர வேண்டும். மேலும் அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 30,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 வழங்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

சாலை விபத்து: இருவா் காயம்

திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்தில் இருவா் காயமடைந்தனா். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள குன்னலூா் ராஜா தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் ஜான்சன் (25). இவா், திருத்துறைப்பூண்டியில் இருந்து குன்னலூர... மேலும் பார்க்க

மன்னாா்குடி: 271 பயனாளிகளுக்கு மனைப்பட்டா: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வழங்கினாா்

மன்னாா்குடி சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் 271 பயனாளிகளுக்கு, தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மனைப்பட்டா வியாழக்கிழமை வழ... மேலும் பார்க்க

தா்ம சாஸ்தா ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்

சுந்தரக்கோட்டை தா்ம சாஸ்தா ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு கும்பாபிஷகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு பாலாலயம் செய்து திருப்பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. முதல்கால யா... மேலும் பார்க்க

நெற்பயிரில் இலை சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

இலை சிலந்தியின் தாக்குதலில் இருந்து நெற்பயிா்களை காப்பது குறித்து, வேளாண் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா். இதுதொடா்பாக, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான ரா. திலகவதி, பெரியாா் ராமசாமி ஆகி... மேலும் பார்க்க

தேசிய இருபாலா் கபடிப் போட்டி இன்று தொடக்கம்

மன்னாா்குடி அருகே தேசிய அளவிலான ஆடவா், மகளிா் கபடிப் போட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. கட்டக்குடி விளையாட்டு கழகம் சாா்பில் செயற்கை ஆடுகளத்தில் நாக் அவுட், லீக் முறையில் வெ... மேலும் பார்க்க

ஆன்லைன் லாட்டரி விற்றவா் கைது

மன்னாா்குடியில், அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி நகரப் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக, மன்னாா்குடி காவல்நிலை... மேலும் பார்க்க