செய்திகள் :

உத்தரகண்டில் மஞ்சள் எச்சரிக்கை: மீட்பு பணியில் தொய்வு!

post image

உத்தரகண்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பால் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தராலி கிராமம் நிலச்சரிவில் புதைந்தது. இந்த இயற்கை சீற்றத்தால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதிலும், மண்ணுக்கள் புதைந்ததிலும் 4 போ் உயிரிழந்ததாகவும், 70 போ் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதில், 15 பாதுகாப்புப் படை வீரா்களும் அடங்குவா்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 49 பேர் காணாமல் போனதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. சிலபகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் கிட்டத்தட்ட பாதி கிராமமே புதைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தராலியைச் சுற்றியுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இணைக்கும் கங்னானி அருகே முக்கியமான பெய்லி பாலம் ஓரளவு செயல்பாட்டு வந்துள்ளது. இருப்பினும், கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் தடைபட்டுள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், செவ்வாய், புதன்கிழமைக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி டேராடூனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சோங்காட், தப்ரானி, ஹர்சில் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலை தடைபட்டுள்ளது. இதனிடையே உத்தரகண்ட் முழுவதும் பகலில் மழை பெய்யும் என்று ஐஎம்டி 'மஞ்சள்' எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்மோரா, டேராடூன், ஹரித்வார், நைனிடால், பௌரி, உதம் சிங் நகர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என 'சிவப்பு' எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

டேராடூனில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. உத்தரகாசியிலும் மழை பெய்தது. பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு ஒரு உணவகம் இருந்த இடத்தின் இடிபாடுகளை தோண்டி வருவதாக தராலியில் உள்ள இந்திய-திபெத்திய எல்லை காவல் துறை அதிகாரி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இடங்களை உத்தரகாசி மாவட்ட நீதிபதி பிரசாந்த் ஆர்யா, இன்று காலை ஹர்சிலுக்குச் சென்று, திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உருவான ஏரியின் நீர்மட்டத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஆய்வு செய்தார்.

இந்த வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் உள்ள ஒரு ராணுவ முகாமுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Early morning rain on Monday threatened to hamper the ongoing search and rescue operations in the flash floods-hit Dharali village, with the India Meteorological Department (IMD) issuing a 'yellow' alert for all districts of Uttarakhand.

பிரமாணப் பத்திரம் கொடுக்க அது என் தரவுகள் அல்ல, உங்களுடையது! ராகுல்

வாக்குத் திருட்டு விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யக் கோரிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு... மேலும் பார்க்க

தூக்கத்தில் கொன்றுவிடு! ஆபத்தான ரகசியங்களை கடத்தும் செய்யறிவு! மனித குலத்துக்கு அழிவா?

செய்யறிவு பாதுகாப்பு அம்சங்கள் 2025 என்ற தலைப்புல் நடத்தப்பட்ட ஆய்வில், செய்யறிவு மாடல்கள், யாருக்கும் தெரியாமல் மற்றொரு மாடலுக்கு ரகசிய தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

புத்தகம் வைத்து தேர்வெழுதும் முறை! சிபிஎஸ்இ 9ஆம் வகுப்புக்கு அறிமுகம்!!

வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வுகளின்போது புத்தகங்களை வைத்து எழுதுவதற்கான பரிந்துரைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியிருக்கிறது.தேசிய கல்விக் கொள்கை 2020-படி, பள்ளிக் கல... மேலும் பார்க்க

தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்: தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தில்லியில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க தில்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் தெரு நாய்களால் ரேபீஸ் நோயால் பாதி... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் செல்ல எம்.பி.க்களுக்கு சுதந்திரம் இல்லை: கே.சி. வேணுகோபால்

வாக்குத் திருட்டு மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகளை எதிர்த்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலர், எம்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவு: 9 தன்னார்வலர்கள் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த குடிநீர் கால்வாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தன்னார்வலர்கள் உயிரிழந்தனர், மூன்று... மேலும் பார்க்க