செய்திகள் :

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

post image

டேராடூன் (உத்தரகண்ட்): உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம், தாராலி நகரத்தில் திடீரென பெய்த கனமழை வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின், தாராலி நகரத்தில் ஆக. 22 ஆம் தேதி நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தால் அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளின் உள்ளே வெள்ளநீர் புகுந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தாராலி முழுவதும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட இடிபாடுகள் மற்றும் வாகனங்கள் சூழ்ந்து காணப்படும் நிலையில், சாக்வாரா மற்றும் செப்தோன் சந்தைப் பகுதியில் 2 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தாராலி நகரத்தில் திடீரென பெய்த கனமழை வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "செவ்வாய்க்கிழமை முதல்வர் தலைமையில் நடைபெற்ற உயரதிகாரிகள் கூட்டத்தில், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுடன் மாநில அரசு முழுமையாக துணை நிற்கும் என்று முதல்வர் கூறினார். தாராலி, சயனசட்டி அல்லது பவுரி என அனைத்து பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் திடீரென பெய்த கனமழை வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரிடரின் போது உத்தரகாசி, சாமோலி மற்றும் பவுரி மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்ட துரித செயல்பாடுகளுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு சாத்தியமான அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் என்று அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 சிஆர்பிஎப் வீரர்களை மீட்டது இந்திய ராணுவம்!

Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami has announced financial assistance of five lakh rupees each for families...

விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் : முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து

சேலம்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருக்கக் கூடிய விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் என்றும் நான் அதிமுகவுக்குதான் வாக்கு கேட்பேன் என சேலத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். உற... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 சிஆர்பிஎப் வீரர்களை மீட்டது இந்திய ராணுவம்!

மாதோபூர் (பஞ்சாப்): பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள மாதோபூர் தலைமையகம் அருகே மழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 சிஆர்பிஎப் வீரர்கள், பொதுமக்கள் 3 பேரை புதன்கிழமை காலை 6 மணிக்கு இந்திய ராணுவ விமா... மேலும் பார்க்க

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தி திருநாளையொட்டி, காஞ்சிபுரம் காமட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் புதன்கிழமை ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

சென்னை: விநாயகர் சதுர்த்தியாயொட்டி, தமிழகம் முழுவதும் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோயில்களில் புதன்கிழமை காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றன. தமிழகம்... மேலும் பார்க்க

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக... மேலும் பார்க்க

நெல்லை கவின் ஆணவக் கொலை: மேலும் 15 நாள்கள் காவல் நீட்டிப்பு!

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் உள்பட மூவருக்கு மேலும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தையே உலுக்கிய ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித்,... மேலும் பார்க்க