செய்திகள் :

உத்தரகாசி பேரிடர்: 66 பேர் மாயம்! அதிநவீன கருவிகள் மூலம் தேடும் பணிகள் தீவிரம்!

post image

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் மாயமான 66 பேரை, தேடும் பணிகளில் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாசியில் கடந்த ஆக.5 ஆம் தேதி, மேகவெடிப்பினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் தாராலி பகுதியில் இருந்த ஏராளமான குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டு சேதமாகின. இதனால், தற்போது வரை 22 நேபாள தொழிலாளிகள் உள்பட 66 பேர் மாயமானதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாயமானவர்களின் நிலைக் குறித்து தற்போது வரை தெரியவராத நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள், நேற்று (ஆக.11) பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சேதனைகளை மேற்கொண்டனர். இருப்பினும், அங்கு பெய்து வரும் தொடர் மழையால், தாராலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, புவியியல் நிபுணர்கள் நிலத்தை ஊடுருவும் அதிநவின ரேடார் கருவிகளின் உதவியுடன், இடிபாடுகளினுள் சிக்கியுள்ள மனிதர்களைத் தேடும் பணிகளை இன்று (ஆக.12) தொடங்கியுள்ளனர்.

முன்னதாக, பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து தற்போது வரை, 1300 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!

Experts from the National Geophysical Research Institute are reportedly engaged in the search for 66 people who went missing in landslides and floods following a cloudburst in Uttarkashi.

திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம்!

வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் திருப்பதி மலைப் பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பதி திருமலை கோயிலுக்குச் செல்லும் வாகனங்கள் சோதனைக்குப் ப... மேலும் பார்க்க

மூக்கு துவாரம் வழியாக மூளைக் கட்டி அகற்றம்! மாற்றி யோசித்த மருத்துவர்கள்

சண்டிகர்: உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த 2 வயது குழந்தையின் மூளையில் வளர்ந்திருந்த கட்டிய மூக்குத் துவாரம் வழியாகவே அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.மூளையில் வளர்ந்திருந்த 4.5 செ.மீ... மேலும் பார்க்க

2017-க்குப் பின்... சில்லறை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு!

கடந்த ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவான 1.55 சதவீதமாகக் குறைந்தது.காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்ததாலும், பரவலான பருவமழையின் தாக்கத்தாலும... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியலில் 6 முறை சுஷ்மா குப்தா பெயர்! ஆனால் ஆச்சரியம் ஒன்று!

மகாராஷ்டிர மாநில வாக்காளர் பட்டியலின் ஒரே பக்கத்தில் சுஷ்மா குப்தா என்ற பெண் ஆறு முறை இடம்பெற்று ஆச்சரியமளித்திருக்கும் நிலையில், ஆறு வாக்காளர் அட்டைக்கும் தலா ஒரு வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டிருப்பது உ... மேலும் பார்க்க

தெருநாய்கள் விவகாரத்தில் மனிதாபிமான வழி தேவை: பிரியங்கா காந்தி

தில்லியில் தெருநாய்களை அகற்றும் விவகாரத்தில் மனிதாபிமான வழியைக் கண்டறிய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் அனை... மேலும் பார்க்க

ஆதார் என்பது குடியுரிமை சான்று அல்ல: உச்ச நீதிமன்றம் ஏற்பு

புது தில்லி: ஆதார் என்பது சரியான அடையாள ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.பிகார் சிறப்பு வாக்களர் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் த... மேலும் பார்க்க