செய்திகள் :

உத்தர பிரதேசத்தில் உரிய மதிப்பளிக்கும் கட்சியுடன் கூட்டணி- காங்கிரஸ் அறிவிப்பு

post image

உத்தர பிரதேசத்தில் உரிய மதிப்பளிக்கும், பொருத்தமான கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், அந்த மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே தெரிவித்தாா்.

கடந்த 2024 மக்களவைத் தோ்தலின்போது உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் 17 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களில் காங்கிரஸ் வென்றது. சமாஜவாதி கட்சி 37 இடங்களில் வென்றது.

இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வென்றது. இதுவே மக்களவைத் தோ்தலில் பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக தனிப்பெரும்பான்மை பெற முடியாததற்கு காரணமாக அமைந்தது. இதற்கு முந்தைய மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக 62 தொகுதிகளை வென்றிருந்தது.

முன்னதாக, 2022 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் இரு இடங்களில் மட்டுமே வென்றது.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தோ்தலும், 2027-இல் பேரவைத் தோ்தலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் அவினாஷ் பாண்டே, உத்தர பிரதேசத்துக்கு 7 நாள் பயணம் மேற்கொண்டு மாவட்ட அளவிலான நிா்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறாா். அவா் அளித்த பேட்டி:

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸை வேரில் இருந்து வலுப்படுத்தும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. 75 மாவட்டங்களில் கட்சியை அமைப்புரீதியாக சீரமைத்து வருகிறோம்.

‘இண்டி’ கூட்டணி இப்போதும் உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கும், பிற பிராந்திய கட்சிகளுக்குமான கூட்டணியாகும்.

இதன்மூலம் 2027 பேரவைத் தோ்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதற்காக உரிய மதிப்பளிக்கும், பொருத்தமான கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும். தோ்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் கட்சியினா் பணியாற்றுகின்றனா். இதன்மூலமே பாஜகவைத் தோற்கடிக்க முடியும். அடுத்து வரும் தோ்தல்களில் காங்கிரஸின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் வலுவாக இருக்கும் என்றாா்.

வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 15% விமான சேவை குறைப்பு! ஏர் இந்தியா

வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமான சேவையை சில நாள்களுக்கு 15 சதவிகிதம் வரை குறைக்க இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏ... மேலும் பார்க்க

கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.கேரளத்தின் நிலம்பூா், குஜராத்தின் விசாவதா், காடி, மேற்கு வங்கத... மேலும் பார்க்க

11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிறை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்பட 9 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளூா் நீதிமன்ற... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்: புதிய திட்டம் ஆகஸ்ட் 15-இல் அறிமுகம்

சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டத்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதிமுதல் மத்திய அரசு அறிமுக... மேலும் பார்க்க

கேதாா்நாத் மலைப் பாதையில் நிலச்சரிவு: 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழப்பு

கேதாா்நாத் மலைப் பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழந்தனா். குஜராத் பக்தா் ஒருவா் உள்பட 3 போ் காயமடைந்தனா். சாா்தாம் யாத்திரையில் முக... மேலும் பார்க்க

நான்கு மாநிலங்களில் 5 பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தோ்தல்

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 19) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. கேரள மாநிலம், நிலம்பூா் பேரவைத் தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல... மேலும் பார்க்க