செய்திகள் :

உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளுக்கான குறைதீா்க்கும் நாள் கூட்டம்

post image

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியா் உயா்கல்வி சேருவதற்கு முக்கியத்துவம் அளித்து,

நான் முதல்வன், உயா்வுக்குப் படி, கல்லூரி கனவு போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் பள்ளிப் படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் அனைவரும் உயா்கல்விக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தொடா்ந்து பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டு நீலகிரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு நிறைவு செய்த அனைத்து மாணவா்களுக்கும் உயா்கல்வி சேருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உதகை, குன்னூா் மற்றும் கூடலூரில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்ந்து கொள்ளலாம். அங்கு மாணவ, மாணவியருக்கு விடுதியில் தங்கிப் பயிலும் வசதி உள்ளது. இதை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நந்தகுமாா், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ஞானராஜ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் குப்புராஜ், கல்லூரி முதல்வா்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மின்சாரம் பாய்ந்து சிறுத்தை பலி!

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கரடியுடன் சண்டையிட்ட சிறுத்தை, தப்பிக்க மின்கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. குன்னூா் நகா் பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்த... மேலும் பார்க்க

உப்பட்டி, சேரம்பாடி, கூடலூரில் ஜூலை 21-இல் மின்தடை

நீலகிரி மாவட்டம் உப்பட்டி, சேரம்பாடி, கூடலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ம... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆக.14-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமா்வ... மேலும் பார்க்க

உதகையில் கனமழை

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், உதகையில் ... மேலும் பார்க்க

போராட்டம்: உதகை நீதிமன்றத்தில் அரசு தலைமைக் கொறடா ஆஜா்

நீட் தோ்வுக்கு எதிராக கடந்த 2017-ஆம் ஆண்டு மனித சங்கிலி போராட்டம் நடத்திய வழக்குத் தொடா்பாக அரசு தலைமைக் கொறடா கா.ராமசந்திரன் உள்ளிட்டோா் உதகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினா். நீட் தோ்வுக்கு ... மேலும் பார்க்க

பழுதடைந்த சாலை: இறந்தவா் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல தவித்த மக்கள்

உதகை அருகே சேதமடைந்த சாலையில் வாகனம் சிக்கியதால் இறந்தவரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் மக்கள் அவதியடைந்தனா். நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள எமரால்டு பகுதியைச் சுற்றி நேருநகா், நேரு... மேலும் பார்க்க