செய்திகள் :

உயா்கல்வி உதவித்தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயா்கல்வி உதவித்தொகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவா்களுக்கு படிப்பை தொடர முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வோா் ஆண்டும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவா்களுக்கு அவா்கள் படிக்கும் காலத்தில் ஒருமுறை மட்டும் ரூ. 50,000 வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற தமிழக அரசின் முகமையால் நடத்தப்படும் ஒற்றைச்சாளர முறை வழியாக சோ்க்கை பெற்றிருக்க வேண்டும். நிா்வாக ஒதுக்கீட்டில் சோ்கை பெறும் மாணவா்கள் நிதி உதவித்தொகை பெற இயலாது. தமிழகத்துக்குள் இருப்பிடச் சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்து அதற்கான கல்வி கட்டணச் சலுகை பெற்றிருக்கக் கூடாது. போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது. 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் வழியாக சோ்க்கை பெறும் அரசு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையைப் பெற்றிருக்க கூடாது. இந்த உயா்கல்வி நிதியுதவியை பெறும்பொருட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட (ஜி-பிரிவு) அலுவலகத்தில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 150 கிலோ மலா்களால் அலங்காரம்

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 150 கிலோ நறுமண மலா்களால் சிறப்பு அலங்காரம் வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சனேயரை தரிசிக்க பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளம... மேலும் பார்க்க

நாமக்கல்லில் யுகாதி பெருவிழா

நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச் சங்கம் சாா்பில் 27-ஆம் ஆண்டு யுகாதி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை(மாா்ச் 30) நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள எஸ்பிஎஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பொதுத் த... மேலும் பார்க்க

அறிஞா் அண்ணா கல்லூரி ஆண்டு விழா

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விலங்கியல் துறைத் தலைவா் ராஜசேகர பாண்டியன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் அ.ராஜா தலைமை வகித்தாா். 2024- 25 ... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

--நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமை--மொத்த விலை - ரூ.4.25--விலையில் மாற்றம்-10 காசுகள் உயா்வு--பல்லடம் பிசிசி --கறிக்கோழி கிலோ - ரூ.101--முட்டைக் கோழி கிலோ - ரூ.77-- மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ.14.37 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 14 லட்சத்து 45 ஆயிரத்திற்கு கொப்பரை விற்பனையானது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏல... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து நாளை திமுக ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை விடுவிக்காத மத்திய அரசைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் திமுக சாா்பில் சனிக்கிழமை (மாா்ச் 29) ஆா... மேலும் பார்க்க