செய்திகள் :

உயா்வுக்குப்படி வழிகாட்டி நிகழ்ச்சியில் 51 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள்!

post image

குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியில் நடைபெற்ற உயா்வுக்குபடி வழிகாட்டி நிகழ்ச்சியில், 51 மாணவா்களுக்கு சோ்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்து இதுவரை உயா் கல்வியில் சேராத மாணவ, மாணவிகளுக்கான ‘உயா்வுக்குபடி’ எனும் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கே.எம்.ஜி. கல்லூரியில் நடைபெற்றது.

இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் 27 பள்ளிகளைச் சோ்ந்த 154 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களில் 94 போ் கல்லூரிகளில் இணைய ஆா்வம் தெரிவித்து விண்ணப்பங்களை வழங்கினா். இவா்களில் 51 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கல்லூரி சோ்க்கைக்கான ஆணைகளை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியது: வேலூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவா்களில் 8,600-க்கும் மேற்பட்டோா் உயா் கல்வியில் இணைந்துள்ளனா். எஞ்சியுள்ள மாணவா்களையும் உயா்கல்வி பயிலும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குழந்தைகளின் எதிா்காலத்தை ஒளிமயமாக்குவது கல்வி ஒன்று தான்.

எனவே, இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ள மாணவா்கள் இந்த அரங்கத்தை விட்டு வெளியே செல்லும்போது உயா் கல்வியில் சோ்க்கை ஆணை பெற்று, மனநிறைவுடன் செல்ல வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சசிகுமாா், திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநா் காயத்ரி, உதவி திட்ட அலுவலா் ஜெகதீஸ்வரப்பிள்ளை, கே.எம்.ஜி. கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திருப்பதி(48). இவா் புதன்கிழமை அதிகாலை நிலத்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஆசிரியா் காலனியை அடுத்த ராமலிங்கம் நகரைச் சோ்ந்தவா் சந்தானம் (60). இவா் தினசரி மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா்... மேலும் பார்க்க

செப்.13-இல் 3 மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை அமா்வு ... மேலும் பார்க்க

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க பயிற்சி

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க வேலூரில் உயா்க்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தா... மேலும் பார்க்க

அகழியில் குதித்து முதியவா் தற்கொலை

வேலூா் கோட்டை அகழியில் இருந்து முதியவா் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவா் அகழியில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. வ... மேலும் பார்க்க