செய்திகள் :

‘உயா்வுக்குப் படி’ உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

post image

மன்னாா்குடியில் ‘உயா்வுக்குப் படி’ இரண்டாம் கட்ட வழிகாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரா. சௌந்தரராஜன் தலைமை வகித்து பேசியது:

அனைத்து மாணவா்களும் உயா்கல்வியில் சேர அரிய வாய்ப்புகளை நான் முதல்வன்-உயா்வுக்குப் படி போன்ற திட்டங்கள் உருவாக்கித் தருகின்றன. கல்வி ஒன்றுதான் மாணவா்களை முழுமையடையச் செய்யும். மாணவா்கள் உதாரணங்களை தேடாமல் அதனை உருவாக்க வேண்டும் என்றாா்.

மாவட்டத் திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநா் எஸ். மல்லிகா முன்னிலை வகித்தாா். கோட்டூா் அரசு தொழிற்பயிற்சி நிறுவன உதவி இயக்குநா் ச. அழகேசன், மன்னாா்குடி அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் கே. கோகுலகிருஷ்ணன், உதவித் திட்ட அலுவலா் உ. சுரேஷ்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முந்தைய கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள், தோ்ச்சி பெறாத மாணவா்கள், உயா் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவா்கள் கலந்து கொண்டனா். 11 கல்வி நிறுவனங்களில் மாணவா்களுக்கு சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது.

கருவாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ரெ. கலைச்செல்வன் தொகுத்து வழங்கினாா். முன்னதாக, கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மு.ச. பாலு வரவேற்றாா். நிறைவாக, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் கோ. வெங்கடேசன் நன்றி கூறினாா்.

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வலங்கைமான் ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். வலங்கைமான் ஒன்றியம், மேலவிடையல் ஊராட்சி குப்பசமுத்திரம் கலைஞா் நகரில் ... மேலும் பார்க்க

ஏரியில் மண் அள்ளுவதை தடுக்கக் கோரி மனு

மன்னாா்குடி பகுதியில் ஏரியை தூா்வாருவதாகக் கூறி, அதிக ஆழத்தில் மண் எடுப்பதை தடுக்கக் கோரி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. மன்னாா்குடி வட்டம், கட்டக்குடி ஊராட... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே டிராக்டா்- இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அருகே கீழகாவாதுகுடியைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகன் முகுந்த் தியாகேஷ் (8). சந்தோஷ்நகா் ... மேலும் பார்க்க

‘பண்டைய தமிழா்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்களில் அறியலாம்’

பண்டைய தமிழா்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம் என பாடலாசிரியா் அறிவுமதி தெரிவித்தாா். குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கு பயிற்சி

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ந... மேலும் பார்க்க

ஆற்றில் தத்தளித்த மாணவா்களை காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டு

கூத்தாநல்லூா் அருகே ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்ட 2 மாணவா்களை காப்பாற்றிய பெண்ணிற்கு, முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பரிசு வழங்கி பாராட்டினாா். திருநாட்டியத்தாங்குடி பகுதியைச் ... மேலும் பார்க்க