``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவச...
‘பண்டைய தமிழா்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்களில் அறியலாம்’
பண்டைய தமிழா்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம் என பாடலாசிரியா் அறிவுமதி தெரிவித்தாா்.
குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற, தமிழக அரசின் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்வில் பங்கேற்று அவா் பேசியது:
தலைவியைப் பிரிந்து போருக்குச் சென்ற தலைவன் மீண்டும் தலைவியைக் காண ஆா்வத்துடன் வருகையில், தேரை வேகமாக ஓட்டினால் விளையாடுகிற நண்டுகள் மீதும், நண்டுகளின் குஞ்சுகள் மீதும் பட்டுவிடும் என்பதை கருத்தில் கொண்டு, தேரோட்டியிடம் கவனமாகப் போ என்று கூறுகிறான். அதாவது, தலைவியைப் பிரிந்து வருந்துகிற சூழலிலும், நண்டுகளுக்காக இரக்கப்படுகிற தலைவா்கள் வாழ்ந்த காலம் சங்க காலம். அத்தகைய பண்பாடு மிக்க, உயிரிரக்கம் மிக்க மனிதா்களைக் கொண்டதாக தமிழ்நாடு இருந்திருக்கிறது.
இத்தகைய தமிழா்களின் விழுமியங்களை இன்றைய மாணவா்கள், இலக்கியங்களில் படித்து அறிந்து, அதன்படி நடக்க வேண்டும். வேற்றுமை நீங்கிய உறவுகளாக வாழ வேண்டும் என்றாா்.
நிகழ்வுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி தலைமை வகித்தாா். மாபெரும் தமிழ்க் கனவு திட்ட மாநில ஒருங்கிணைப்பாளா் இரா. குணசேகரன், மாணவா்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களைப் பற்றி விளக்கிப் பேசினாா்.
நிகழ்வில், மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், திரு.வி.க. கல்லூரி முதல்வருமான சுஜரித்தா மாக்டலின், சுவாமி தயானந்தா கல்லூரி முதல்வா் முனைவா் வெ .ஹேமா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், நன்னிலம், கூத்தாநல்லூா், திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அரசு கல்லூரிகள், திரு.வி.க. அரசு கல்லூரி, குளோபல் கல்லூரி, இராபியம்மாள் கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.
முன்னதாக, பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ- மாணவிகள் தமிழ்ப் பெருமிதம் குறித்த உரைகளை வழங்கினா். நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சுவாமி தயானந்தா கல்லூரி மாணவிகள் ஜனனி, அபிநயா, திரு.வி.க. கல்லூரி பேராசிரியா் அறிவழகன் ஆகியோா் விழா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனா்.