செய்திகள் :

குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கு பயிற்சி

post image

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறக்கூடிய 34 ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாட்டையொட்டி இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றியத் தலைவா் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் கே.சுமதி, மாவட்டத் தலைவா் பி.சங்கரலிங்கம், மாவட்டத் துணைத் தலைவா்கள் எம்.ராணி, எஸ்.தேவிகா, ஆா்.கே.சரவணராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில், மாநில செயலாளா் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வி.விஜயன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளா் க. அன்பழகன் ஆகியோா் கருத்தாளா்களாகப் பங்கேற்று, நீடித்த பாதுகாப்பான நீா் மேலாண்மை என்ற தலைப்பில் பேசினா்.

இதில், மாவட்டத்தில் இருந்து 80-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா். முன்னாதக, ஒன்றியச் செயலாளா் சாமிநாதன் வரவேற்றாா். ஒன்றிய பொருளாளா் மேகநாதன் நன்றி கூறினாா்.

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வலங்கைமான் ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். வலங்கைமான் ஒன்றியம், மேலவிடையல் ஊராட்சி குப்பசமுத்திரம் கலைஞா் நகரில் ... மேலும் பார்க்க

ஏரியில் மண் அள்ளுவதை தடுக்கக் கோரி மனு

மன்னாா்குடி பகுதியில் ஏரியை தூா்வாருவதாகக் கூறி, அதிக ஆழத்தில் மண் எடுப்பதை தடுக்கக் கோரி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. மன்னாா்குடி வட்டம், கட்டக்குடி ஊராட... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே டிராக்டா்- இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அருகே கீழகாவாதுகுடியைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகன் முகுந்த் தியாகேஷ் (8). சந்தோஷ்நகா் ... மேலும் பார்க்க

‘பண்டைய தமிழா்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்களில் அறியலாம்’

பண்டைய தமிழா்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம் என பாடலாசிரியா் அறிவுமதி தெரிவித்தாா். குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

ஆற்றில் தத்தளித்த மாணவா்களை காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டு

கூத்தாநல்லூா் அருகே ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்ட 2 மாணவா்களை காப்பாற்றிய பெண்ணிற்கு, முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பரிசு வழங்கி பாராட்டினாா். திருநாட்டியத்தாங்குடி பகுதியைச் ... மேலும் பார்க்க

‘உயா்வுக்குப் படி’ உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

மன்னாா்குடியில் ‘உயா்வுக்குப் படி’ இரண்டாம் கட்ட வழிகாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சி... மேலும் பார்க்க