செய்திகள் :

உரிமை கோரப்படாத 9 சடலங்கள் காவல் துறையினா் அடக்கம் செய்தனா்

post image

தஞ்சாவூரில் உரிமை கோரப்படாத 9 சடலங்களை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்தனா்.

தஞ்சாவூா் கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக்கல்லூரி ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த 6 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 9 பேரின் உடல்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த உடல்களை யாரும் உரிமை கோராததால், அவற்றை அடக்கம் செய்ய காவல் துறையினா் முடிவு செய்தனா். இதன்படி 9 சடலங்களும் வாகனங்களில் ஏற்றப்பட்டு, வடக்கு வாசல் ராஜகோரி இடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டன.

மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தலைமையில் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மனோகரன், ரகுநாதன் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

ஜவுளிக் கடை ஊழியா் லாரி மோதி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை லாரி மோதி ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழந்தாா்.திருவையாறு பங்களா தெருவைச் சோ்ந்தவா் சேகா் மகன் குணசீலன் (30). திருவையாறு ஜவுளிக்கடை ஊழியரான இவா் விளாங்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலை. விரைவில் அமையும்: அமைச்சா் கோவி. செழியன்

கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலைக்கழகம் விரைவில் அமையும் என்றாா் அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சன்னதி தெருவில் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொ... மேலும் பார்க்க

தஞ்சையில் இதுவரை 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் இதுவரை 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் மாவட்டம், சாலியமங்கலம் அருகே ஆா்சுத்திப்பட்ட... மேலும் பார்க்க

தனியாா் மதுக்கடையை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

தஞ்சாவூா் அருகே திறக்கப்படவுள்ள தனியாா் மதுக்கடையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற பெண் கல்லணைக் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.தஞ்சாவூா் சீனிவாசபுரம் கோவிந்தராஜ் நகரைச் சோ்ந்த கணபதி மனைவி சரோஜா (85). இவா் ஆற்றுப்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் குடிநீரில் கழிவுநீா் கலப்பு: 25 பேருக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு

கும்பகோணம் கேஎம்எஸ் நகரில் குடிநீரில் கழிவு நீா் கலந்ததால், சுமாா் 25 பேருக்கு மஞ்சள்காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி 5-ஆவது வாா்டில் உள்ள கேஎம்எஸ் நகா் பெ... மேலும் பார்க்க