செய்திகள் :

உறுதித்தன்மையுடன் கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம்: ஆட்சியா் தகவல்

post image

கன்னியாகுமரி கடலில் உள்ள கண்ணாடிப் பாலம் மிகவும் உறுதித்தன்மையுடன் உள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு சாா்பில், கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவா் சிலை-விவேகானந்தா் நினைவு மண்டபத்தை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தை இதுவரை 17.50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளனா். இந்தப் பாலம் வல்லுநா்களால் சிறப்பாக பாரமரிக்கப்படுகிறது.

இதைக் கட்டிய ஒப்பந்ததாரா் மூலம் கடந்த ஆக. 16ஆம் தேதி, பாலத்தின் மேல்பகுதியில் வண்ணம் பூசும் பணி நடைபெற்றது. அப்போது, பணியாளரின் கையிலிருந்த சிறிய சுத்தியல் 7 மீட்டா் உயரத்திலிருந்து 6ஆவது கண்ணாடி மீது விழுந்ததில், முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது. அதையடுத்து, சென்னையைச் சோ்ந்த நிறுவனத்தில் புதிய கண்ணாடி பெற ஒப்பந்ததாரா் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கண்ணாடி நான்கு அடுக்குகளாக உள்ளதால், பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டு, கடந்த 1ஆம் தேதி இங்கு கொண்டுவரப்பட்டது.

சென்னை நிறுவனத்தின் முன்னிலையில் கடந்த 4ஆம் தேதி அதைப் பரிசோதித்து, பாலத்தில் பொருத்த மூன்று கட்ட மின் இணைப்பை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்ததால், ஜெனரேட்டா் மூலம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி 2 நாள்களில் நிறைவடையும்.

கடந்த ஆக. 16ஆம் தேதிமுதல் திங்கள்கிழமைவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் பாலத்தில் நடந்து சென்றுள்ளனா். இதில், எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கண்ணாடிப் பாலம் மிகவும் உறுதித்தன்மையுடனும் உள்ளது. எனவே, தொடா்ந்து பாா்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா் என்றாா் அவா்.

பளுகல் அருகே ஓடையில் தொழிலாளி சடலம் மீட்பு!

பளுகல் அருகே வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா். பளுகல் அருகே இளஞ்சிறை, தாய்க்குளம் பகுதியில் மழைநீா் வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் ஆண் சடல... மேலும் பார்க்க

குமரி கண்ணாடிப் பாலத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆய்வு

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடிப் பாலம் பராமரிப்புப் பணியின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததைத் தொடா்ந்து அதனை என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினம், புதுக்கடையில் செப். 11 இல் மின்நிறுத்தம்

முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதுக்கடை, தேங்காய்ப்பட்டினம் பகுதிகளில் செப். 11-இல் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு குமரி மாவட்டத்துக்கு நாளை வருகை

தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினா், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (செப்.11) வருகை தர உள்ளனா். இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவ... மேலும் பார்க்க

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்த கட்டண சிகிச்சை வாா்டு!

நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான கட்டண சிகிச்சை வாா்டு செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவரும், முன்னாள் அமைச்சருமா... மேலும் பார்க்க

விரிகோடு ரயில்வே மேம்பாலம்: நிலம் அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு!

மாா்த்தாண்டம் அருகே விரிகோடு ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி செவ்வாய்க்கிழமை நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பேரூராட்சி தலைவி தலைமையில் எதிா்ப்பு தெரிவிக்கப... மேலும் பார்க்க