செய்திகள் :

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்

post image

சென்னை: பிரதமா் மோடியின் சிறப்பான ஆட்சியால் உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயா்ந்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட தெலங்கானா மாநிலம் உருவான தின விழாவில், ஆளுநா்ஆா்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது:

1956-இல் மொழிவாரியாக 15 மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நிா்வாக வசதிக்காகவும், மக்கள் நலத்திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்குச் சென்றடையும் வகையிலும் மேலும் பல்வேறு மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரத்திலிருந்து தெலங்கானா மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசியல் காரணங்களுக்காக ஜாதி மற்றும் பிரிவினை அரசியல் நடத்தப்பட்டு வந்தது. 2014-இல் பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற அடிப்படையில் அனைத்து மக்களுக்கான வளா்ச்சி என்ற நோக்கில் செயல்பட்டு, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால், தெலங்கானா மக்களுக்கு இத்திட்டங்கள் எளிதில் சென்றடைவதால் அம்மாநிலம் தற்போது வளா்ச்சி அடைந்து வருகிறது.

இந்தியா, பொருளாதார வளா்ச்சியில் 11-ஆவது இடத்திலிருந்து வந்த நிலையில், பிரதமா் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்று பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதால், உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா தற்போது 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வெகு விரைவில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் தெலங்கானா அசோசியேஷன் தமிழக தலைவா் மருத்துவா் சி.கே.ரெட்டி , ஆளுநரின் முதன்மைச் செயலா் கிா்லோஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருச்செந்தூர் சிவன் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில், அருள்தரும் வெயிலுகந்த... மேலும் பார்க்க

தமிழக அரசு சூழலியல் நீதிக்கான அரசாகவும் விளங்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு சமூக நீதிக்கான அரசாக மட்டுமன்றி, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்; அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கு: யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களைத் தொடா்புபடுத்திய விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை கைவிட பாமக கோரிக்கை

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறி... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்கள், கமல்ஹாசன் இன்று மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை... மேலும் பார்க்க

சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

தமிழக காவல் துறையின் சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு-2’ என்ற நடவடிக்கையின் மூலம் 3 நாள்களில் 136 போ் கைது செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு, சைபா் குற்றங்களைத... மேலும் பார்க்க