செய்திகள் :

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

post image

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.

இந்நிலையில் தனது தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்புக் கருவி வைக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதுதொடர்பாக அவர் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த மகன் இருக்கிறார் என்றால் இருக்கிறார். ஒட்டுக் கேட்புக் கருவியை காவல்துறையிடம் வழங்கி புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சைபர் கிரைம் போலீசாரிடமும் புகார் அளித்திருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் நானும் தனியாக சிறப்புக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன். இந்த குழு காவல்துறைக்கு உதவும்.

பாமக எனது கட்சி, நான்தான் தலைவர். அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம்.

நான் நியமித்த 100 மாவட்டச் செயலாளர்களை சந்திக்க அழைத்தபோது அவர்களை வரவிடாமல் அன்புமணி தடுத்தார். என்னைச் சந்திக்க வராத 100 பேருக்கு மாற்றாக புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தேன்" என்று கூறியுள்ளார்.

PMK founder Ramadoss has said that Anbumani is the son who spied on his father in the world.

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு பாரதிய... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினை கமல்ஹாசன் சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனு... மேலும் பார்க்க

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்... மேலும் பார்க்க