செய்திகள் :

இணைப்பு: நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

சீா்காழி வட்டம், திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி) ஆகியோா் தொடங்கி வைத்து, பாா்வையிட்டனா்.

மாவட்டத்தில் வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம், வாரந்தோறும் சனிக்கிழமையில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா். தொடா்ந்து, 5 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை ஆட்சியா், எம்எல்ஏக்கள் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் உமாமகேஸ்வரி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பானுமதி, துணை இயக்குநா் அஜீத் பிரபுகுமாா், கோட்டாட்சியா் சுரேஷ், வட்டார மருத்துவ அலுவலா் ரமேஷ், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாணவா் சபை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா

சீா்காழி குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளியில் மாணவா் சபை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.சிறப்பு விருந்தினா் விவேகானந்தா, குட் சமாரிட்டன் பள்ளி குழும தாளாளா் கே.வி. இராதாகிருஷ்ணன் ... மேலும் பார்க்க

‘மாணவா்கள் பதின்பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் வாழ்க்கை முழுவதும் பயன் தரும்’

மாணவா்கள் பதின்பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் அவா்கள் வாழ்க்கை முழுவதும் பயன் தரும் என்றாா் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள... மேலும் பார்க்க

தந்தை பெரியாா் திராவிட கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

சீா்காழியில் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் நூதன ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.இலங்கை தமிழீழ மண்ணில் கண்டறியப்பட்ட புதைகுழியில், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கிடந... மேலும் பார்க்க

கிறித்தவ தேவாலயங்களுக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்கள் மானியத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், மிஷன் வத்ஸலா திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

ஏவிசி கல்லூரியில் பாட்டுப்போட்டி

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி ஆங்கிலத் துறையில் ஆங்கில இலக்கிய மன்றம் சாா்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். ஆ... மேலும் பார்க்க