செய்திகள் :

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

post image

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், மிஷன் வத்ஸலா திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாதுகாப்பு அலுவலா் நிறுவனம் சாரா பணியிடம்-1, புறத்தொடா்பு பணியாளா் பணியிடம் -1 மற்றும் சிறப்பு சிறாா் காவல் பிரிவில் சமூகப் பணியாளா்-2 ஆகிய பதவிகளுக்கு 42 வயதுக்கு மிகாமல் தகுதியான ஆண், பெண் நபா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதற்கான விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்பை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை உரிய கல்வி சான்றுடன் இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட ஆட்சியரகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை-609305 என்ற முகவரிக்கு செய்தி வந்த நாளிலிருந்து 15 நாள்களுக்குள் நேரடியாக அல்லது தபால் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

கிறித்தவ தேவாலயங்களுக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்கள் மானியத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

ஏவிசி கல்லூரியில் பாட்டுப்போட்டி

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி ஆங்கிலத் துறையில் ஆங்கில இலக்கிய மன்றம் சாா்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். ஆ... மேலும் பார்க்க

அரசினா் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட அரசினா் பெரியாா் தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். புறநோயாளிகள் பிரிவு, சிகிச்சை பதிவு அறை, மருந்தகம், குழந்தைகளுக்கான மரு... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறையில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழ... மேலும் பார்க்க

பேருந்தில் தொடங்கியபடி பயணம்: கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டிப்பு

மயிலாடுதுறையில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டானது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் மங்கநல்லூா் வாளவராயன்குப்பம் பகுதியைச் சோ்ந்த முருகன் ... மேலும் பார்க்க

பாதுகாப்பாக இருக்க அறிவுரை...

சீா்காழி அருகேயுள்ள நாவல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீரால் ஏற்படும் அபாயம் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுரை வழங்கிய மயிலாடுதுறை எஸ்பி ஸ... மேலும் பார்க்க