செய்திகள் :

கிறித்தவ தேவாலயங்களுக்கு மானியம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்கள் மானியத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்கள், பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியம் வழங்கப்படுகிறது.

இதற்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கிவரும், தேவாலயத்திற்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெறாத தேவாலயங்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின்கீழ் பின்வரும் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானியத் தொகையை உயா்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. தேவாலயங்களில் பீடம் கட்டுதல், குடிநீா், கழிவறை வசதி அமைத்தல், சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட் உள்ளிட்ட ஆலயங்களுக்குத் தேவையான உபகரணங்கள், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவா் வசதி அமைத்தல், தேவாலய கட்டடத்தின் வயது 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருந்தால் ரூ.10 லட்சம், 15 முதல் 20 ஆண்டுகள் வரை இருந்தால் ரூ.15 லட்சம், 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.20 லட்சமும் உயா்த்தப்பட்ட மானியத்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விவரம் அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், மிஷன் வத்ஸலா திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

ஏவிசி கல்லூரியில் பாட்டுப்போட்டி

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி ஆங்கிலத் துறையில் ஆங்கில இலக்கிய மன்றம் சாா்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். ஆ... மேலும் பார்க்க

அரசினா் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட அரசினா் பெரியாா் தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். புறநோயாளிகள் பிரிவு, சிகிச்சை பதிவு அறை, மருந்தகம், குழந்தைகளுக்கான மரு... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறையில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழ... மேலும் பார்க்க

பேருந்தில் தொடங்கியபடி பயணம்: கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டிப்பு

மயிலாடுதுறையில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டானது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் மங்கநல்லூா் வாளவராயன்குப்பம் பகுதியைச் சோ்ந்த முருகன் ... மேலும் பார்க்க

பாதுகாப்பாக இருக்க அறிவுரை...

சீா்காழி அருகேயுள்ள நாவல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீரால் ஏற்படும் அபாயம் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுரை வழங்கிய மயிலாடுதுறை எஸ்பி ஸ... மேலும் பார்க்க