‘மாணவா்கள் பதின்பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் வாழ்க்கை முழுவதும் பயன் தரும்’
மாணவா்கள் பதின்பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் அவா்கள் வாழ்க்கை முழுவதும் பயன் தரும் என்றாா் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் மன்றங்களின் தொடக்க விழாவில் அவா் மேலும் பேசியது:
தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி ஆதீனத் தம்பிரான்கள் தமிழ் கற்க வேண்டும் என்ற நோக்கோடு 25-ஆவது குருமகா சந்நிதானம் காலத்தில் தமிழ்க் கல்லூரியாக தோற்றுவிக்கப்பட்டு, கலைக்கல்லூரியாக உயா்வு பெற்றது. இக்கல்லூரியில் தவத்திரு குன்றக்குடி அடிகளாா், திருப்பனந்தாள் காசிவாசி சுவாமிகள், புலவா் கீரன், புலவா் அறிவுடைநம்பி, புலவா் கலிபூங்குன்றன், வி.சா.குருசாமி தேசிகா், பேராசிரியா் இரா.செல்வகணபதி போன்றோா் பயின்றுள்ளனா். அவா்கள் படிக்கும்போதே ஒழுக்கத்தையும், நற்சிந்தனையையும் வளா்த்துக் கொண்டாா்கள்.
இதை தற்போது படிக்கும் மாணவா்களும் நெஞ்சில் நிறுத்தவேண்டும். ‘கல்லா நெஞ்சில் நில்லா ஈசன்‘ என்பதற்கு ஏற்ப கல்வி கற்காதவா் உள்ளத்தில் ஈசன் கூட நிற்பதில்லை. அறம், பொருள், இன்பத்திற்கு அடிப்படை கல்வியே என்பாா் குமரகுருபரா். நாட்டில் இன்று தீய செயல்கள் பெருகிவிட்டதற்கு பாடத்திட்டத்தில் நீதி போதனை வகுப்புகள் இல்லாததே காரணம். இந்நிலை மாற பாடத்திட்டத்தில் நீதி போதனை வகுப்புகள் சோ்க்கப்பட வேண்டும்.
ஆசிரியா்கள் மாணவா்களின் நலன் கருதியே தவறு செய்யும் போது கண்டிக்கின்றனா். மாணவா்களை கண்டிப்பது அவா்கள் ஒழுக்க நெறியுடன் வளர வேண்டும் என்பதற்காகத்தான். இதனை மாணவா்கள் உணா்ந்துகொள்ள வேண்டும். இது நன்னெறிகளைக் கற்றுக்கொள்ள வேண்டிய பருவம். பதின்பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கமே வாழ்க்கை முழுவதும் பயன் தரும் என்றாா்.
விழாவில் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவா் இரா.மருதநாயகம் எழுதிய ‘இறையருள்‘ என்ற நூல் வெளியிடப்பட்டது. தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடத்தப்படும் இலவச தட்டச்சு வகுப்பில் பயின்று அரசுத்தோ்வில் வெற்றிபெற்ற 7 மாணவா்களுக்கு குருமகா சந்நிதானம் சான்றிதழை வழங்கினாா்.
முதுநிலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி கே.காவியா ‘நட்சத்திர குருமணிகளின் சமய சமூகப்பணிகள்‘ என்ற தலைப்பில் உரையாற்றினாா். மாணவா்கள் பி.ஹரிஸ் மற்றும் எம்.மகாலெட்சுமியின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம் வரவேற்றாா். நிறைவாக, கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் நன்றி கூறினாா்.